அண்மைய செய்திகள்

recent
-

தந்தை இறந்து போனது தெரிந்தும் விளையாட சென்றது ஏன்? கோஹ்லி உருக்கமான விளக்கம்...


இந்திய கிரிக்கெட் அணியின் துணை தலைவரான கோஹ்லி தற்போது ஒரு சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார்.

இதற்கு அவர் தனது நாட்டின் மீதும், விளையாட்டின் மீதும் கொண்ட அளவில்லாத காதலே முக்கிய காரணமாகும்.

அவர் தனது தந்தை இறந்த போன தகவல் அறிந்தும் கூட தனது அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற தொடர்ந்து துடுப்பெடுத்தாடினார்.

2006ம் ஆண்டு கோஹ்லி ரஞ்சிக் கிண்ண போட்டியில் டெல்லி அணிக்காக ஆடிக் கொண்டிருக்கும் போது அதிகாலை 3 மணயளிவில் அவரது தந்தை இறந்துவிட்டதாக தகவல் வந்தது.

இருப்பினும் அன்று காலை நடந்த கர்நாடகா அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினார். தந்தை இறந்த தினத்தில் நீ குடும்பத்தோடு தான் இருக்க வேண்டும் என்று சக வீரர்கள் அறிவுறுத்தியும், அவர் கேட்கவில்லை.

அந்தப் போட்டியில் 90 ஓட்டங்களை குவித்த கோஹ்லி டெல்லி அணி ’பாலே-ஆன்’ஆவதில் இருந்தும் காப்பாற்றினார்.

இது பற்றி ஒரு பேட்டியில் கோஹ்லி கூறுகையில், எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. என்னுடைய தந்தை அன்று இரவு இறந்துவிட்டார். எனது வாழ்வின் மிகவும் கடினமான நாள் அதுதான்.

நான் காலை அந்தப் போட்டியில் விளையாடியது உள்ளுணர்வால் ஏற்பட்டது. என்னை பொறுத்தவரை போட்டியை பாதியில் விட்டுவிட்டு செல்வது பாவம் செய்வதற்கு சமமானது. கிரிக்கெட் எனது வாழ்வில் அத்தனை முக்கியமான ஒன்று.

எனது தந்தையின் மரணம் தந்த வலி எனது கனவுகளை அடைய தேவையான வலிமையை தந்தது. எனது தந்தையின் கனவுகளையும் அது நிறைவேற்றியது என்று உருக்கமாக கூறியுள்ளார்.

தந்தை இறந்து போனது தெரிந்தும் விளையாட சென்றது ஏன்? கோஹ்லி உருக்கமான விளக்கம்... Reviewed by Author on May 06, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.