முழு நாட்டிற்கும் அரசியல் தீர்வு அவசியம்: இரா. சம்பந்தன்....
நாட்டை கடன் சுமையில் இருந்து காப்பாற்ற வடக்கு கிழக்கிற்கு மாத்திரமல்ல, முழு நாட்டிற்கும் அரசியல் தீர்வு அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சில தமிழ் பிரதிநிதிகளும் தெளிவான புரிதல் இன்றி அரசியல் இலாபங்களுக்காக சுயநலமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தின் தென்னமரவாடி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சமூக மத்திய நிலையம் ஒன்றை திறந்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திகளில் புலம்பெயர் தமிழர்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Go to Videos
தென்னமரவாடி கிராம அபிவிருத்தி நிலையம் எதிர்க்கட்சித் தலைவரால் திறந்து வைப்பு!
திருகோணமலை உட்பட வடக்கு, கிழக்கில் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க பயன்படுத்த முடியும்.
சிங்கப்பூர் விசேட நிபுணர்கள் இந்த அபிவிருத்தித் திட்டங்களை தயாரித்து வருகின்றனர். இந்த வருட இறுதிக்குள் அவர்கள் தமது திட்டங்களை முன்வைக்க உள்ளனர்.
இப்படியான சந்தர்ப்பத்தில் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு, தொழிற்சாலைகளை திறந்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
முழு நாட்டிற்கும் அரசியல் தீர்வு அவசியம்: இரா. சம்பந்தன்....
Reviewed by Author
on
May 08, 2016
Rating:

No comments:
Post a Comment