அண்மைய செய்திகள்

recent
-

53 மணிநேரம் யோகா:தமிழகத்தில் பெண் உலக சாதனை....


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் பெண் ஒருவர் தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் வசித்து வரும் கே.பி ரஞ்சனா (வயது- 34). என்ற பெண் வழக்கறிஞரே குறித்த உலக சாதனையை படைத்துள்ளார்.

ஐ.நா.வின் அறிவிப்பின் படி நேற்று ஜூன் 21ம் திகதி 2வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

ஜூன் 19ம் திகதி யோகா ஆசனத்தை செய்ய தொடங்கிய ரஞ்சனா, ஜூன் 21ம் திகதி மதியம் 3 மணியளவில் தன்னுடைய ஆசானத்தை முடித்துள்ளார். தொடர்ந்து 53 மணி நேரம் யோகா செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

நேபாளத்தை சேர்ந்த உத்தம் முக்தன் கடந்த 2015ல் தொடர்ந்து 50 மணி நேரம் யோகா செய்து அசத்தியுள்ளார்.

அவரை தொடர்ந்து, ரஞ்சனா ஒரு மணி நேரத்திற்கு 5 நிமிட இடைவெளியில் 600 யோகா ஆசனங்களை செய்துள்ளார் என்று மஹாமஹாரிஷி அறக்கட்டளை நிர்வாகி ரமேஷ் ரிஷி தெரிவித்துள்ளார்.


53 மணிநேரம் யோகா:தமிழகத்தில் பெண் உலக சாதனை.... Reviewed by Author on June 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.