மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு- முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை இன்று 17-06-2016 கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இன்று உத்தியோகபூர்வமாக 3கோடியே65இலட்சம் பெறுமதியான தொழிநுட்ப ஆய்வுகூடத்தினை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் அவர்களுடன் இணைந்து நாடாவினை பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் அதிபர் ரி.தனேஸ்வரன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சாள்ஸ் நிர்மலநாதன், வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் மன்னார் மாவட்ட வலயக்கல்விப்பணிப்பாள்ர் திருமதி.சுகந்தி செபஸ்ரியன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் கே.எம்.கூஞ்ஞ உதவிப்பணிப்பாளர்கள் கல்வி அமைச்சின் அதிகாரிகள் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறப்பு- முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
June 17, 2016
Rating:
No comments:
Post a Comment