அண்மைய செய்திகள்

recent
-

சம்பூர் பகுதியிலுள்ள காளி கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை


திருகோணமலை சம்பூர் பகுதியிலுள்ள காளி கோயில் உடைக்கப்பட்டு தங்க நகைகள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


சுமார் 77,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளும், 8000 ரூபா பணமும் கோவிலிருந்து திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.

இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவு பெறும் வரை காளி கோயில் பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பூர் பகுதியிலுள்ள காளி கோயில் உடைக்கப்பட்டு கொள்ளை Reviewed by NEWMANNAR on June 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.