மீண்டும் இந்திய கிரிக்கெட்டை கலக்கப் போகும் ஐவரணி....
ஆடுகளத்தில் அதிரடி காட்டி இந்திய அணியை பலப் போட்டிகளில் வெற்றி பெற வைத்த சச்சின், கங்குலி, டிராவிட், லட்சுமணன் ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகும் இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுடன் முன்னாள் தலைவர் அனில் கும்ப்ளேவும் 5வது நபராக இணைந்துள்ளார்.
சச்சின், கங்குலி, லட்சுமணன் ஆகியோர் ஆலோசனை குழுவிலும், டிராவிட் ஜூனியர் அணியின் பயிற்சியாளராகவும் உள்ளனர்.
இந்த நிலையில் அனில் கும்ப்ளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் மீண்டும் இணைந்துள்ள இந்த ஐவர் கூட்டணி இந்திய கிரிக்கெட்டை வளர்ச்சி பாதையில் பயணிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மீண்டும் இந்திய கிரிக்கெட்டை கலக்கப் போகும் ஐவரணி....
Reviewed by Author
on
June 24, 2016
Rating:

No comments:
Post a Comment