யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!
யாழ். மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ். மாவட்ட மனித உரிமைகள் அமைப்பாளர் நிதியுதவி வழங்கி வைத்துள்ளார்.
இது தொடர்பிலான நிகழ்வு சாவகச்சேரியில் அண்மையில் இடம்பெற்றது.
இதன் போது யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ரவியிடம் 2 லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலையை யாழ். மாவட்ட மனித உரிமைகள் அமைப்பாளர் வைத்தியலிங்கம் சிவராசா வழங்கி வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!
Reviewed by Author
on
June 15, 2016
Rating:

No comments:
Post a Comment