அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டின் ஓர் அங்கமான கண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்துவைப்பு.(படங்கள்

மன்னார் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை(14) மன்னாரில் ஆரம்பமாகிய நிலையில் இன்று(15) புதன் கிழமை காலை மன்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலையில் கண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

-மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் முதலில் வித்துவம் நூல் வெளியீட்டு விழா இடம் பெற்றது.

மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி செலின் சுகந்தி செபஸ்ரியன் குறித்த நூலினை வைபவ ரீதியாக வெளியீடு செய்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லா இணைந்து விருது வழங்கி வைத்ததோடு கண்காட்சியையும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

குறித்த நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டதோடு மன்னார் கல்வி வலயத்திலுள்ள சுமார் 1539 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


-மன்னார் நிருபர்-

(15-06-2016)

மன்னாா் கல்வி வலயத்தின் ஆசிாிய மாநாடு 2016  முதல்நாள் நிகழ்வு இடம்பெற்றது.படங்கள் இணைப்பு
http://www.newmannar.com/2016/06/201615.html


























மன்னார் கல்வி வலய ஆசிரியர் மாநாட்டின் ஓர் அங்கமான கண்காட்சி வைபவ ரீதியாக ஆரம்பித்துவைப்பு.(படங்கள் Reviewed by NEWMANNAR on June 15, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.