அண்மைய செய்திகள்

  
-

அடுத்தவர்களின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை-எமது உரிமைகளை பாதுகாக்க மட்டுமே நாம் செயற்படுகின்றோம்- மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம்-(அறிக்கை இணைப்பு) n

மன்னார் ஆயரையும் கூட்டமைப்பின் கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம்'. என்ற தலைப்பில்' திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள் என சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள்.

-குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம் சார்பில் இவ்வமைப்பின் செயலாளர் தே.பி.சிந்தாத்துரை இன்று சனிக்கிழமை(25) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,

 
எமது கத்தோலிக்க திருமறையானது கி.பி. 1500 அளவில் எமது கீழைப் பிரதேச நாடுகளில் மக்கள் மத்தியில் அழமாக வேறுன்ற ஆரம்பித்தது. 

எமது மன்னார் மறைமாவட்டத்தில் மிகுந்த உத்வேகத்துடன் மக்கள் மத்தியில் கத்தோலிக்க மறை ஆரம்ப கால முதலே விசுவாச வித்து ஊன்றப்பட்டதால் எம்மக்களே இப்பிரதேசத்தின் ஆதிக் கிறீஸ்தவர்களாகியதுடன் கத்தோலிக்கர்களின் முன்னோடிகளாகவும் விளங்கினர்.

 இதன் காரணமாக கத்தோலிக்கத் திருச்சபையால் மன்னார் தீவிலும் தீவை அண்டிய பெரு நிலப்பரப்பிலும் 500 ஆண்டுகளுக்கு முன் கத்தோலிக்க தேவாலயங்கள் அமைக்கப்பட்டன.

 இவற்றுள் மிகப் பழமை வாய்ந்த திருத்தலங்களில் ஒன்றாக மாந்தை மாதா கோவில் தோன்றியது. இங்கு 1590ல் தேவதாயாரின் திருச்சொரூபம் ஸ்தாபிக்கப்பட்டு கத்தோலிக்கர்களின் வணக்க ஸ்தலமாக பிரபல்யம் அடைந்தது. 

ஆயினும் பின்னர் இப்பிரதேசத்தை கைப்பற்றிய ஒல்லாந்தர் கத்தோலிக்க தேவாலயங்களை சேதமாக்கி கத்தோலிக்கர்களையும் துன்புறுத்தினர். இந்நடவடிக்கையால் மக்கள் ஒன்று சேர்ந்து மாந்தையில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த தேவதாயின் திருச்சொரூபத்தை எடுத்துச் சென்று பாதுகாப்பாக மடுத்தலத்தில் ஸ்தாபித்தனர். இதன் பின்னர் மீண்டும் அதே இடத்தில் 1949ல் சிறிய ஆலயம் கட்டியெழுப்பப்பட்டது.

இந்நிலையில் இவ்விடத்தில் ஆலயம் எழுப்பப்பட்டதை பொறுக்கமுடியாத இந்து சம்மேளனம் தமது உயர்மட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி எமது புனித மறையை அழித்துவிட முயல்கிறார்கள்.

 இதன் ஒரு பகுதியாக 500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்புப் பெற்ற மாந்தைமாதா ஆலயத்திற்கு சுமார் 3 ஏக்கர் அளவிலான ஒரு சிறு காணித்துண்டை அண்மையில் மன்னார் ஆயருக்கு வழங்க காணி ஆனையாளர் உத்தரவு இட்டார். உரிய சட்டநடவடிக்கைகளை மேற்கொண்டு அரச வர்த்தமானியில் பிரசுரித்தபின் பிறப்பிக்கப்பட்ட இவ்வுத்தரவை எதிர்த்து துரதிஸ்ரவசமாக இந்து சம்மேளனம் என்னும் அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். 

 குறிப்பாக 'மன்னார் ஆயரையும் கூட்டமைப்பு கிறிஸ்தவ எம்பிக்களையும் கண்டிக்கின்றோம்'. என்ற தலைப்பில் ' திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அத்துமீறி வைத்துள்ள மாதா சிலையை அகற்றுங்கள்', 'சிவ பூமி மன்னாரை மறைபூமி ஆக்காதே' என்ற சுவர் ஒட்டிகளை கொழும்பு, கண்டி, வவுனியா மற்றும் பிரதான பகுதிகளில் ஒட்டிவருகின்றார்கள். 
இது அப்பட்டமான பொய் என்பதுடன் அப்பாவி இந்துமக்கள் மத்தியில் மத துவேசத்தை தூண்டும் முயற்சியாக காணப்படுவதால் இதனை வன்மையாக கண்டிக்கின்றோம். 


நாம் எந்த விதத்திலும் இவர்களுக்கு எதிராகவோ இந்து மதச் செயற்பாட்டுகளுக்கு எதிராகவோ நடந்து கொள்ளவில்லை. எமது மதச்சடங்கு நிகழ்வுகள் யாவும் சிறிய வரையறுக்கப்பட்ட மாந்தைச்சந்தி காணியில் மட்டுமே நடை பெறுகின்றன.
இந்து சமயம் மிகவும் தொன்மைவாய்ந்தது என்பதனை யாரும் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது.

 அவர்கள் பாவனைக்காக பல நூறு ஏக்கர் காணிகள் உள்ளன. பல்வேறு மடங்களும் இந்து மக்கள் குடியிருப்புக்களும் பல்வேறு தொழில்களும் உள்ளன. 

இவற்றை நாங்கள் யாரும் எதிர்க்கவோ மறுக்கவோ இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் இச்சிறுதுண்டுக்காணியில் எமது ஆலயம், அதுவும் 500 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பதை இவர்கள் ஏன் எதிர்க்க வேண்டும்? எமது திருவிழா மட்டும் வாராந்த சில மணிநேர சமய நிகழ்வுகள் மாத்திரம் இவ்வாலயத்திற்கான காணித்துண்டில் அமைதியாகவே நடைபெறுகின்றன.
 
எனவே மடு அன்னையின் பூர்வீக வதிவிடமாகிய மாந்தை மாதா ஆலயத்தை காத்து பராமரித்து வருவது எமது கடமை என்பதை வர்புறுத்திக் கூறுகின்றோம். அடுத்தவர்களின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை 'எமது உரிமைகளை பாதுகாக்க மட்டுமே நாம் செயற்படுகின்றோம.; என்பதை சம்மந்தப்பட்ட சகோதரர்களுக்கு அன்புடனும் அமைதியுடனும் தெரிவிக்கின்றோம்.என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அடுத்தவர்களின் உரிமையை அபகரிக்க நாம் முயலவில்லை-எமது உரிமைகளை பாதுகாக்க மட்டுமே நாம் செயற்படுகின்றோம்- மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியம்-(அறிக்கை இணைப்பு) n Reviewed by NEWMANNAR on June 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.