அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ரிசாத்துக்காக இரண்டு தடவை அடிக்கல் நாட்டுவிழா - சாள்ஸ் எம் பி குற்றச்சாட்டு

அடிக்கல் நாட்டு வைபவம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொணர விரும்புகிறேன்
 மீ ள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள வீட்டுத்தித்திட்டத்தின் பகுதி நடவடிக்கையாக கடந்த 26.06.2016 சனிக்கிழமை அன்று மன்னார் பிரதேச செயளாளர் பிரிவிலுள்ள பெரியகடை கிராமத்தைச்சார்ந்த பயனாளி ஒருவரின் வீட்டு நிர்மாணத்திற்குரிய அடிக்கல் நாட்டு வைபவம் தொடர்பான உண்மை நிலையை வெளிக்கொணர விரும்புகிறேன்.

அமைச்சர் கெளரவ ரிசாத் பதியுதீன் அவர்கள் கலந்துகொள்ளும் இந்நிகழ்விற்கு வருகை தருமாறு மன்னார் பிரதேச செயலாளரினால் நிகழ்விற்கு முதல் நாள் 24.06.2016 அன்று தொலைபேசிவாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பினை நான் நிராகரித்த போதும், பெரியகடை மக்களுக்காக இந்நிகழ்வில் கலந்து கொண்டேன்.

அந்நிகழ்வில் கலந்து நான் உரையாற்றுகையில்
“ மேற்படி 261 வீட்டுத்திட்டம் வைபவ ரீதியாக அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏற்கனவே 15.06.2016 புதன் கிழமை அன்று எழுத்தூர் தரவான்கோட்டைகிராமத்தில் மன்னர் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் பிரதேச செயலாளர் ஆகியோரினால் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அமைச்சர் ரிசாத் பதியுதீனால் மீண்டும் ஒருமுறை அடிக்கல் நாட்டும் நிகழ்வினை பெரியகடை கிரமத்தில் மேற்கொள்ளவதற்கு என்ன தேவையுள்ளதென்பதையும், அமைச்சரின் தேவையின் பொருட்டே இவ் அடிக்கல் நாட்டு வைபவம் இரண்டாவது தடவையாக மன்னார் பிரதேச தீவுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதையும்” குறிப்பிட்டிருந்தேன்.

எனது உரையினை நிகழ்விற்கு சமூகமளித்திருந்த
ஊடகவியலாளர்கள், பொது மக்கள், அரச ஊழியர்கள் அனைவரும் செவிமடித்திருந்த நிலையில், இந்நிகழ்வில் நான் பேசியவிடயம் சிலபேருக்கு ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காகவும் சிலர் எனது செயற்பாட்டினை புது வியாக்கியானமளித்து கேளிக்கை புரிவது வேடிக்கையானது தான்.

அமைச்சர் ரிசாத்துக்காக இரண்டு தடவை அடிக்கல் நாட்டுவிழா - சாள்ஸ் எம் பி குற்றச்சாட்டு Reviewed by NEWMANNAR on June 26, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.