காய்கறிகளின் விலை உயர்வு!
தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்தில் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு கிடைக்கும் காய்கறிகளின் அளவு குறைவாக இருப்பதனால் தான் இவ்வாறு விலை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலிருந்து தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கு காய்கறிகளை கொண்டு வரும் லொறிகளுக்கு பதிலாக தற்போது சிறிய ரக வாகனங்களில் இங்கு காய்கறிகள் கொண்டுவரப்படுவதாகவும்,அந்த அளவிற்கு காய்கறிகளின் உற்பத்தி குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இன்றைய நாளில் காய்கறிகளின் கிலோ ஒன்றின் மொத்த விற்பனை விலை 100-180 வரை என்றும் சில்லறை விலை 200 ரூபாவாக அதிகரித்திருப்பதாகவும் இங்குள்ளவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காய்கறிகளின் விலையேற்றத்தால் உணவகங்களை நடத்துவோர் மிகவும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நாடு பூராகவும் பெய்த மழை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தம்புள்ள பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காய்கறிகளின் விலை உயர்வு!
Reviewed by NEWMANNAR
on
June 13, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
June 13, 2016
Rating:


No comments:
Post a Comment