அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் திடீர்,திடீர் என மின் தடை-மக்கள் பாதிப்பு.

கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக இரவு,பகல் பாராது திடீர் திடீர் என மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றமையினால் மன்னார் மக்களும்,வர்த்தகர்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பகல் நேரங்களிலும்,அதிகாலை நேரங்களிலும் குறித்த மின் தடங்கள் ஏற்படடுகின்றது.

தற்போது புனித நேன்புக்காலம் என்பதினால் அதிகாலை நேரங்களில் பல மணி நேரங்களாக திடீர்,திடீர் என மின் தடங்கள் ஏற்படுவதினால் நோன்பு நோற்கும் கடமைகளில் ஈடுபடும் முஸ்ஸீம் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

-எனவே புனித நோன்புக்காலம் என்பதினால் நோன்பு நோற்கும் முஸ்ஸீம்களின் நலனை கருத்தில் கொண்டும்,குறிப்பாக மக்களின் நிலனை கருத்தில் கொண்டும் சீரான மின் வினியோகத்தை மன்னார் மாவட்டத்தில் வழங்க மன்னார் மாவட்ட மின்சார சபை மற்றும் மின்அத்தியட்சகர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-

-மன்னார் நிருபர்-

(21-06-2016)

மன்னாரில் திடீர்,திடீர் என மின் தடை-மக்கள் பாதிப்பு. Reviewed by NEWMANNAR on June 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.