அண்மைய செய்திகள்

recent
-

நல்லிணக்க முயற்சிகளுக்கு ஏன் வெளிநாடுகளின் உதவியை பெற முடியாது? சார்ள்ஸ் நிர்மலநாதன்

நல்லிணக்க முயற்சிகளுக்கு ஏன் வெளிநாடுகளின் உதவி பெற்றுக்கொள்ளப்பட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

அமெரிக்காவினதும் இந்தியாவினதும் ஊடக சுதந்திரம் பற்றி நாடாளுமன்றில் பேசப்படுகின்றது.

இந்திய தேர்தல் ஆணையாளருக்கு காணப்படும் அதிகாரம் பற்றி நாடாளுமன்றில் பேசப்படுகின்றது.

தமக்கு சாதகமான விடயங்கள் குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகளை உதாரணம் காட்டுகின்றனர்.

எனினும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா போன்ற நாடுகளிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவி பெற்றுக்கொள்வது பற்றி பேச இவர்கள் விரும்புவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நல்லிணக்க முயற்சிகளுக்கு ஏன் வெளிநாடுகளின் உதவியை பெற முடியாது? சார்ள்ஸ் நிர்மலநாதன் Reviewed by NEWMANNAR on June 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.