உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் மன்னாரில் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள அரச அதிபர் முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்து.(படம்)
உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் (w.u.s.c.) நிதி உதவியுடன் மன்னார் மாவட்டத்தில் தொழில் துறையினை மேம்படுத்தும் வகையில் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு தொழில் துறை பயிற்சிகளை வழங்குவதற்கு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய முன்னிலையில் இன்று புதன் கிழமை(22) காலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் (w.u.s.c.) நிதி உதவியுடன்,ஐ.டி.எம் மற்றும் வை.ஜீ.ஆர்.ஓ ஆகிய இரு தொழிற் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து குறித்த தொழிற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
-சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வடமாகாண சுற்றுலாத்துறையினூடாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் தகவல் தொழில் நுற்பத்துறைக்கு 10 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, இயந்திரவியல் துறைக்கு 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிறுவங்களினுடாக குறித்த தொழிற் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த தொழிற்பயிற்சிகளுக்கான ஒப்பந்தம் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
இதன் போது உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் (w.u.s.c.) நிதி உதவியுடன் ஆராம்பிக்கப்படவுள்ள தொழிற்பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சியாளர்கள் தமது ஒப்பந்தங்களை கைச்சாத்தியுள்ளனர்.
இதே வேளை கடந்த வருடம் சீடா நிறுவனத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த கனரக வாகன இயக்குனர் பயிற்சியை பூர்த்தி செய்த 12 தொழிற்பயிற்சியாளர்களுக்கு சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் (w.u.s.c.) இலங்கைக்கான பிரதி நிதி எஸ்தர் மைக்கல் டொச், தொழிற்பயிற்சி நிலைய முகாமையாளர்கள்,தொழிற்பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.#
மன்னார் நிருபர்-
(22-06-2016)
உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் (w.u.s.c.) நிதி உதவியுடன்,ஐ.டி.எம் மற்றும் வை.ஜீ.ஆர்.ஓ ஆகிய இரு தொழிற் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து குறித்த தொழிற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
-சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைக்கு 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு வடமாகாண சுற்றுலாத்துறையினூடாக தொழிற்பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
மேலும் தகவல் தொழில் நுற்பத்துறைக்கு 10 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு, இயந்திரவியல் துறைக்கு 20 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்டுள்ள தொழிற்பயிற்சி நிறுவங்களினுடாக குறித்த தொழிற் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது.
குறித்த தொழிற்பயிற்சிகளுக்கான ஒப்பந்தம் இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.
இதன் போது உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் (w.u.s.c.) நிதி உதவியுடன் ஆராம்பிக்கப்படவுள்ள தொழிற்பயிற்சிக்காக தெரிவுசெய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தொழிற்பயிற்சியாளர்கள் தமது ஒப்பந்தங்களை கைச்சாத்தியுள்ளனர்.
இதே வேளை கடந்த வருடம் சீடா நிறுவனத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த கனரக வாகன இயக்குனர் பயிற்சியை பூர்த்தி செய்த 12 தொழிற்பயிற்சியாளர்களுக்கு சான்றிதல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய,உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் (w.u.s.c.) இலங்கைக்கான பிரதி நிதி எஸ்தர் மைக்கல் டொச், தொழிற்பயிற்சி நிலைய முகாமையாளர்கள்,தொழிற்பயிற்சியாளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.#
மன்னார் நிருபர்-
(22-06-2016)
உலக கனேடிய பல்கலைக்கழகத்தின் நிதி உதவியுடன் மன்னாரில் தொழிற்பயிற்சிகளை மேற்கொள்ள அரச அதிபர் முன்னிலையில் ஒப்பந்தம் கைச்சாத்து.(படம்)
Reviewed by NEWMANNAR
on
June 22, 2016
Rating:

No comments:
Post a Comment