அண்மைய செய்திகள்

recent
-

12 வயது சிறுமி துஷ்பிரயோகம்! 12 பேர் கைது! பௌத்த பிக்குவுக்கு வலைவீச்சு....


12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோத்திற்கு உட்படுத்து அறையினை வாடகைக்கு பெற்றுக்கொடுத்தாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் துணை தலைமை ஆய்வாளர் சந்தன விக்ரமரத்ன சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதும், அந்தக் குற்றத்தை செய்வதற்கு உதவி செய்வதும் ஒரே விதமான குற்றமாகும். இரு விதமான குற்றங்களுக்கும் ஒரே தண்டனை வழங்கப்படும்.

குறித்த சிறுமியை துஷ்பிரயோத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பொளத்த பிக்கு ஒருவர் தேடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கடந்த மாதம் 10ஆம் திகதி குறித்த சிறுமி குறைந்தது 9 பேரால் வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன், இரவு கூட்டுபாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சிறுமியை சந்தேக நபர்கள் வீதியில் விட்டு சென்றுள்ள நிலையில், மறுநாள் காலை சிறுமி பௌத்த விகாரைக்கு சென்றுள்ளார்.

இதன் போது விகாரையிலிருந்த பௌத்த பிக்குவும் தம்மை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

12 வயது சிறுமி துஷ்பிரயோகம்! 12 பேர் கைது! பௌத்த பிக்குவுக்கு வலைவீச்சு.... Reviewed by Author on July 30, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.