அண்மைய செய்திகள்

recent
-

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 3 வயது பாலகன் பலி

ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 3 வயதுடைய பாலகன் பரிதாபமாக பலியான சம்பவமொன்று மிஹிந்தலையில் இடம்பெற்றுள்ளது.



இச் சம்பவம் மிஹிந்தலை குமரசிறி கிராமத்திலுள்ள பலகனது வீட்டில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மதியம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எஸ்.எம். சடீவ் நுஹாஸ் ரஸ்மிஹா தம்பதிகளின் ஒரே மகனான 3 வயது பாலகனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

உயிரிழந்த பாலகனின் தாயார் தோலுரிக்கப்பட்ட சில ரம்புட்டான் பழங்களை பாலகனுக்கு கொடுத்துள்ளனார். இந்நிலையில் அதிலொரு பழத்தின் விதை பாலகனின் தொண்டையில் சிக்கியுள்ளது.

பாலகன் மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அவதானித்த தாயார் அருகிலுள்ள மருத்துவமனைக்கு பாலகனை எடுத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பாலகன் ஏற்கனவே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனை இடம்பெற்றதையடுத்து பாலகனின் சடலம் பெற்றோரிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 3 வயது பாலகன் பலி Reviewed by NEWMANNAR on July 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.