அண்மைய செய்திகள்

recent
-

வைரஸினால் இலங்கையில் கண் நோய் ஏற்படும் அபாயம்...


இலங்கையில் ஒரு வகை வைரஸ் தொற்றினால் கண் நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாககண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் கண் மருத்துவமனைக்கு ; இந்த நாட்களில் சிகிச்சைக்காக வருபவர்களின்எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் கண் சிவப்படைதல்,கண்ணீர் அதிகமாக வருவதுடன்,சிறியளவிலானவலியும் இருக்கும் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் குறித்த கண் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் நன்றாக சவர்க்காரமிட்டுகைகளை சுத்தப்படுத்தி அல்லது சுத்தமான கைக்குட்டைகளை பயன்படுத்துமாறும் கண்மருத்துவ சிறப்பு வைத்தியர் தர்மா இங்குல்பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்கள் அதிகமாக நடமாடும் இடங்களுக்கு செல்வதைதவிர்க்குமாறும்,குறித்த கண் நோயிலிருந்து விசேடமாக சிறுவர்களைபாதுகாக்குமாறும், கண் நோய் ஏற்பட்டிருக்குமானால் மாணவர்களை பாடசாலைக்குஅனுப்புவதை தவிர்க்குமாறும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வைரஸினால் இலங்கையில் கண் நோய் ஏற்படும் அபாயம்... Reviewed by Author on July 19, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.