'தேசப்பற்று இல்லாதவள் என்றபோது மனமுடைந்து போனேன்!' - சானியா
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது சுயசரிதை புத்தகத்தை (ACE against ODDS) வெளியிட்டு உள்ளார். அந்த புத்தகத்தில் பல்வேறு தகவல்களை அவர் பதிவு செய்துள்ளார்.
புத்தக வெளியீட்டின்போது, தன்னை தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் விமர்சித்ததற்கு மனமுடைந்து போனதாக தெரிவித்தார்.
''நான் 2003ம் ஆண்டுதான் டென்னிஸ் களத்திற்கு வந்தேன். அப்போது எனக்கு 16 வயது. இத்தனை ஆண்டுகள் இந்த ஆட்டத்தை ரசித்து விளையாடி விட்டேன்.
பத்திரிகைகளில் அடிக்கடி என்னை பற்றி தவறாக எழுதப்பட்டு வந்தது. அது சரியோ தப்போ எனக்கு தெரியாது. ஒருவேளை தவறான புரிதலாக கூட இருக்கலாம்.
அதனால்தான் என்னை பற்றி மற்றவர்கள் புரிந்து கொள்ள ஒரு புத்தகம் தேவை என்று கருதினேன். இதற்கு முன் நான் எந்த புத்தகமும் எழுதியது இல்லை.
தேசப்பற்று இல்லாதவள் என்று மற்றவர்கள் என்னை விமர்சித்தபோது மனமுடைந்து போயிருக்கிறேன். ஒருவேளை எனது சிறிய வயதில் இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்திருந்தால் கண்ணீரே விட்டுருப்பேன்.
ஓரளவுக்கு மெச்சூரிட்டி ஆன பிறகுதான் இதுபோன்ற விமர்சனங்களை அதிகம் எதிர்கொள்ள நேரிட்டது. இந்த நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை இருக்கப் போவதில்லை. அதில் 20 கோடி பேர் என்னை வெறுத்தாலும் 100 கோடி பேர் என்னை நேசிக்கிறார்கள் அதுபோதும் என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்'' என்றார்.
மேலும் , ''சோகைப்பை திருமணம் செய்த பிறகு எனது தேசப்பற்று மீது இன்னும் சந்தேகம் அதிகரித்தது. எனக்கும் சோகைப்புக்கு நல்ல புரிதல் இருந்ததால் எங்களை இருவரையும் இந்த விஷயம் பாதித்ததில்லை. நானும் ஒருநாள் குழந்தை பெற்றுக் கெரள்வேன். ரொட்டி தயாரிப்பேன். ஆனால் இப்போது இல்லை. அதற்கு தக்க சமயம் வரும்போது அதுவெல்லாம் நடக்கும். டென்னிசில் இருந்து விரைவாக ஓய்வு பெறும் எண்ணம் இல்லை" என தெரிவித்து உள்ளார்.
விளையாட்டு துறைக்கு அரசாங்கம் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறது?
விளையாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன. தற்போது மக்கள் கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டு களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். காமன்வெல்த் விளையாட்டு புதிய நம்பிக்கை தந்துள்ளது. அதன் பின்னர்தான் செய்திகளிலும், மக்கள் மத்தியிலும் மற்ற விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் நாட்டில் எந்த அளவிற்கு திறன்கள் உள்ளது என்பதை உணர்ந்துள்ளனர். விளையாட்டு துறையில் ஜெயிப்பதும், சாதிப்பதும், வெளிச்சத்திற்கு வருவதும் கடினமானது.
மற்ற விளையாட்டுகளை விட கூடுதல் பணம் தேவைப்படும் துறையும் கூட. நம் நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது என்பது எளிமையான காரியம் அல்ல. அதற்கு அரசாங்கம் உதவி வருகிறது. இது இன்னும் அதிகமாகும் என நம்புகிறேன்.
விளையாட்டிற்கு சிறப்பு திட்டங்கள் உள்ளன. தற்போது மக்கள் கிரிக்கெட் மட்டுமின்றி மற்ற விளையாட்டு களுக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். காமன்வெல்த் விளையாட்டு புதிய நம்பிக்கை தந்துள்ளது. அதன் பின்னர்தான் செய்திகளிலும், மக்கள் மத்தியிலும் மற்ற விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நம் நாட்டில் எந்த அளவிற்கு திறன்கள் உள்ளது என்பதை உணர்ந்துள்ளனர். விளையாட்டு துறையில் ஜெயிப்பதும், சாதிப்பதும், வெளிச்சத்திற்கு வருவதும் கடினமானது.
மற்ற விளையாட்டுகளை விட கூடுதல் பணம் தேவைப்படும் துறையும் கூட. நம் நாட்டில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடுவது என்பது எளிமையான காரியம் அல்ல. அதற்கு அரசாங்கம் உதவி வருகிறது. இது இன்னும் அதிகமாகும் என நம்புகிறேன்.
விளையாட்டு வீரர்களின் ஃபிட்னஸ் தற்போது எப்படி இருக்கிறது?
ஒவ்வொரு பகுதிக்கு தகுந்த மாதிரி வீரர்களின் தகுதி இருக்கும். ஈரோப்பியன், அமெரிக்கன் கால் ஃபிட்னஸ் நன்றாக இருக்கும். நம்ம நாட்டை பொறுத்தவரை கோஆர்டினேசன் நன்றாக இருக்கும். முதலில் முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கே பல ஆண்டுகள் தேவைப்படும். இப்போது லெவல் ஆப் ஃபிட்னஸ், லெவல் ஆப் டென்னிஸ் ஆகியவை மேம்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் சீக்கிரம் வளர்ச்சி இருக்கும்.
ஒவ்வொரு முறையும் வெற்றி தோல்வியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
விளையாட்டு துறையில் வெற்றி தோல்வி இருக்கும். வெற்றியோ, தோல்வியோ அதில் தேங்கி விடக்கூடாது. அடுத்தடுத்து இலக்கை நோக்கி நகர வேண்டும். அதுதான் உதவும். வெற்றியின் போது மகிழ்ச்சியாக இருக்கும், அதுவே தோல்வி அடையும் போது நமக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தமுறையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அதுதான் தோல்வியில் இருந்து வெளியே வர ஒரே வழி.
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் பெண்கள் நிலை எப்படி இருக்கிறது?
ஒரு பெண் அத்லெட்டாக நான் பெருமைப்படுகிறேன். நிறைய தடைகள் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும். நான் விளையாட ஆரம்பிக்கும் போது, பெண்கள் டென்னிஸ் விளையாடுவது என்பது கேள்விப்படாத விஷயமாக இருந்தது. பெண்கள் டென்னிஸ் விளையாடி ப்ரொபஷனல் அத்லெட்டாக வருவது என்பது கேள்விப்படாத விஷயம். நான் விளையாடும் போது டென்னிஸ் கோர்ட் கண்டுபிடிப்பதில் துவங்கி எல்லாவற்றுக்கும் கஷ்டம். எதுவுமே இல்லை. மிகவும் மோசமான நிலை அது.
ஆனால் இப்போது அப்படி இல்லை. நிறைய வளர்ந்திருக்கிறது. எளிதாக விளையாடுகிறார்கள். நான் ஆடும்போது அவ்வளவு ஈசியாக இல்லை. ஒரு பெண் என எடுத்துக்கொண்டால் ஒரு கேள்வி முன்னால் வந்து விடும். நீ எப்போ விளையாடுறதை நிறுத்தப்போறே.. உன் நிறம் மங்கிட்டு வருது. எப்போ கல்யாணம்னு கேள்விகள் வந்துகிட்டே இருக்கும். நம் கலாச்சார முறை அப்படி. இதில் இருந்து முன்னேறி நாம் வெளியே வர வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறீர்கள். விளையாட்டில் உங்களுக்கு சிறந்த காலமாக கருதுவது எது?
நிச்சயம். இதுதான். நம்பர் ஒன் தி வேர்ல்டு. இதுதான் என் பெஸ்ட் டைம். 41 முறை மேட்ச் தொடர்ச்சியாக வென்றிருக்கிறோம். நாங்க சாதிச்சிருக்கோம். அடுத்த போட்டிக்கு அமெரிக்கா போகிறேன். ஒரு மாசம் அங்கே தான் இருக்கப்போறேன். இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஒலிம்பிக்கில் யாரோடு சேர்ந்து விளையாடப்போகிறீர்கள்? பயிற்சியை துவங்கி விட்டீர்களா?
நான் இப்போது அமெரிக்கா போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 5 மாசம் இருக்கு. ஒரு ஆண்டில் 30 வாரம் நாங்கள் போட்டியில் பங்கேற்கிறோம். காலம் நெருங்க நெருங்க தான் போட்டியில் கவனம் செலுத்த முடியும். எனவே ஒலிம்பிக்கில் இன்னும் யாரோடு விளையாடுவது என்பதை முடிவு செய்யவில்லை. பயிற்சியையும் துவங்கவில்லை.
ஒவ்வொரு பகுதிக்கு தகுந்த மாதிரி வீரர்களின் தகுதி இருக்கும். ஈரோப்பியன், அமெரிக்கன் கால் ஃபிட்னஸ் நன்றாக இருக்கும். நம்ம நாட்டை பொறுத்தவரை கோஆர்டினேசன் நன்றாக இருக்கும். முதலில் முதல் 50 இடங்களுக்குள் வருவதற்கே பல ஆண்டுகள் தேவைப்படும். இப்போது லெவல் ஆப் ஃபிட்னஸ், லெவல் ஆப் டென்னிஸ் ஆகியவை மேம்பட்டிருக்கிறது. இனி வரும் காலங்களில் சீக்கிரம் வளர்ச்சி இருக்கும்.
ஒவ்வொரு முறையும் வெற்றி தோல்வியை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?
விளையாட்டு துறையில் வெற்றி தோல்வி இருக்கும். வெற்றியோ, தோல்வியோ அதில் தேங்கி விடக்கூடாது. அடுத்தடுத்து இலக்கை நோக்கி நகர வேண்டும். அதுதான் உதவும். வெற்றியின் போது மகிழ்ச்சியாக இருக்கும், அதுவே தோல்வி அடையும் போது நமக்கு இரண்டாவது வாய்ப்பு இருக்கிறது என நினைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தமுறையை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும். அதுதான் தோல்வியில் இருந்து வெளியே வர ஒரே வழி.
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் பெண்கள் நிலை எப்படி இருக்கிறது?
ஒரு பெண் அத்லெட்டாக நான் பெருமைப்படுகிறேன். நிறைய தடைகள் இருக்கிறது. அது உங்களுக்கே தெரியும். நான் விளையாட ஆரம்பிக்கும் போது, பெண்கள் டென்னிஸ் விளையாடுவது என்பது கேள்விப்படாத விஷயமாக இருந்தது. பெண்கள் டென்னிஸ் விளையாடி ப்ரொபஷனல் அத்லெட்டாக வருவது என்பது கேள்விப்படாத விஷயம். நான் விளையாடும் போது டென்னிஸ் கோர்ட் கண்டுபிடிப்பதில் துவங்கி எல்லாவற்றுக்கும் கஷ்டம். எதுவுமே இல்லை. மிகவும் மோசமான நிலை அது.
ஆனால் இப்போது அப்படி இல்லை. நிறைய வளர்ந்திருக்கிறது. எளிதாக விளையாடுகிறார்கள். நான் ஆடும்போது அவ்வளவு ஈசியாக இல்லை. ஒரு பெண் என எடுத்துக்கொண்டால் ஒரு கேள்வி முன்னால் வந்து விடும். நீ எப்போ விளையாடுறதை நிறுத்தப்போறே.. உன் நிறம் மங்கிட்டு வருது. எப்போ கல்யாணம்னு கேள்விகள் வந்துகிட்டே இருக்கும். நம் கலாச்சார முறை அப்படி. இதில் இருந்து முன்னேறி நாம் வெளியே வர வேண்டும்.
இத்தனை ஆண்டுகள் இந்த துறையில் இருக்கிறீர்கள். விளையாட்டில் உங்களுக்கு சிறந்த காலமாக கருதுவது எது?
நிச்சயம். இதுதான். நம்பர் ஒன் தி வேர்ல்டு. இதுதான் என் பெஸ்ட் டைம். 41 முறை மேட்ச் தொடர்ச்சியாக வென்றிருக்கிறோம். நாங்க சாதிச்சிருக்கோம். அடுத்த போட்டிக்கு அமெரிக்கா போகிறேன். ஒரு மாசம் அங்கே தான் இருக்கப்போறேன். இந்த வெற்றியை தக்க வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஒலிம்பிக்கில் யாரோடு சேர்ந்து விளையாடப்போகிறீர்கள்? பயிற்சியை துவங்கி விட்டீர்களா?
நான் இப்போது அமெரிக்கா போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் 5 மாசம் இருக்கு. ஒரு ஆண்டில் 30 வாரம் நாங்கள் போட்டியில் பங்கேற்கிறோம். காலம் நெருங்க நெருங்க தான் போட்டியில் கவனம் செலுத்த முடியும். எனவே ஒலிம்பிக்கில் இன்னும் யாரோடு விளையாடுவது என்பதை முடிவு செய்யவில்லை. பயிற்சியையும் துவங்கவில்லை.
'தேசப்பற்று இல்லாதவள் என்றபோது மனமுடைந்து போனேன்!' - சானியா
Reviewed by Author
on
July 18, 2016
Rating:

No comments:
Post a Comment