அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் ஹரிசன் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டாராம் சிவமோகன் எம்.பி

வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு ஓமந்தை காணியை வழங்கினால் அதனை அமைச்சர் ஹரிசன் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

விவசாய அமைப்பு சார்ந்த பிரதிநிதிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்க வேண்டும் என்பதில் எனக்கு எதிர்ப்பு இல்லை. அதனையே நானும் விரும்பினேன்.

உள்ளூர் உற்பத்தியாளர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நான் பங்கெடுக்காதிருந்தால் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் சிறிரெலோ உதயராசா ஆகியோர் பெயர் எடுத்திருப்பார்கள்.

அதன் காரணமாகவே நான் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க ஓமந்தையில் தெரிவு செய்த இடத்தை அமைச்சர் ஹரிசன் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

அவர் ஏற்றுக் கொண்டால் பரவாயில்லை. எனினும், அவர் ஏற்றுக் கொள்ளாமட்டார் என்பதன் காரணமாகவே, தான் தாண்டிக்குளத்தை தெரிவு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்திற்குரிய குறித்த பொருளாதார மத்திய நிலையத்தை தீர்மானிக்கும் பொறுப்பினை அரசாங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் வழங்கியுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.
அமைச்சர் ஹரிசன் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டாராம் சிவமோகன் எம்.பி Reviewed by NEWMANNAR on July 05, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.