மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை எழுப்பிவிடும் வித்தியாசமான ஆசிரியர்கள்!
சத்தீஸ்கர் மாநிலத்தின் கிராமம் ஒன்றில், பள்ளி மாணவர்களை, அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆசிரியர்கள் எழுப்பிவிடும் வித்தியாசமான முயற்சி நடைபெற்று வருகிறது.
கரியாபாண்ட் மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தின் தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்களும் தினமும் அதிகாலை 4 மணி முதல் தெரு தெருவாகச் சென்று விசில் அடித்து மாணவர்களை எழுப்பி விடுகின்றனர்.
விசில் ஒலியைக் கேட்டு எழும் மாணவர்கள், விரைவாகத் தயாராகி பள்ளிக்குச் செல்கின்றனர். அங்கு குழுவாக அமர்ந்து அவர்கள் பாடங்களை படிக்கின்றனர்.
வித்தியாசமான இந்த முயற்சியின் காரணமாக, இப்பள்ளி மாணவர்கள் அதிசயக்கத்தக்க வகையில் கல்வியில் முன்னேறி வருவதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்களின் இந்த முயற்சி தங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்து வருவதாக மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களை எழுப்பிவிடும் வித்தியாசமான ஆசிரியர்கள்!
Reviewed by Author
on
July 16, 2016
Rating:

No comments:
Post a Comment