யாழில் பெரும் துயரத்தை ஏற்படுத்திய இளம் தவில் கலைஞரின் மரணம்
யாழில் இளம் தவில் கலைஞர் ஒருவர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். கோப்பாய் சேர்ந்த 17 வயதான தவில் கலைஞரே இவ்வாறு உயிர் மாய்த்துள்ளார்.
குறித்த கலைஞர் நேற்றையதினம் புங்குடுதீவு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தவில் கச்சேரிக்கு சென்று வந்துள்ளார். அதன்பின்னர் அச்சுவேலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் தவில் கச்சேரி இருந்த நிலையில் அவர் அங்கு செல்லவில்லை.
அதன்பின்னர் நேற்றிரவு தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
குறித்த கலைஞர் தனது 8 வயதில் தவில் வாசிக்க ஆரம்பித்த நிலையில் தற்போது 17 வயது ஆகின்ற நிலையில் தனது கலை திறமையால் பலரது நெஞ்சங்களில் இடம் பிடித்தவர். இந் நிலையில் அவரது மிக திறமையான தவில் கலைஞர் என பேர் பெற்றஅ இளைஞனின் மறைவு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
Reviewed by Vijithan
on
June 25, 2026
Rating:


No comments:
Post a Comment