அண்மைய செய்திகள்

recent
-

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது


யாழ்ப்பாணம் அனலைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (09) அதிகாலை இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது கைது செய்ப்பட்டதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி கூறினார்.

தமிழகத்தின் ஜெகதாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தற்போது காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் கடற்படையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்திய மீனவர்களிடமிருந்து ட்ரோலர் படகொன்றும் மீன்பிடி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் இந்திய மீனவர்கள், யாழ். கடற்றொழில் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது Reviewed by NEWMANNAR on August 09, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.