அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்....


தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தபட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு சிறைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாகவே இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கவனயீர்ப்பு ஆரம்பத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசியல் கைதிகளின் உறவினர்களும் கலந்து கொண்டனர். இதன்போது இலங்கையில் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கிறது.

அவ்வாறான திருத்தங்கள் வேண்டாம். பயங்கரவாத தடைச் சட்டமே நீக்கப்பட வேண்டும் எனவும் நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயருடன் தமிழ் அரசியல் கைதிகளை வஞ்சித்து கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழில் ஆர்ப்பாட்டம்.... Reviewed by Author on August 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.