தன் உயிரை கொடுத்து எட்டு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்.....
அமெரிக்காவில் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் வளர்ப்பு நாய் உயிரை விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தின் பால்டிமோர் பகுதியில் வசித்து வருபவர் Erika. இவர் தன் வீட்டின் அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு சென்றுவிட்டு வருவதற்குள், அவரது எட்டு மாத குழந்தை Viviana அழுகுரல் கேட்டு வேகமாக வீட்டிற்கு வந்துள்ளார்.
வீட்டை வந்து பார்த்த போது வீடு தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் வீட்டின் உள்ளே அவரது குழந்தை மற்றும் வளர்ப்பு நாயான Polo உள்ளே இருந்துள்ளனர்.
குழந்தை வெப்பம் தாங்காமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தாள். இதனால் அருகில் இருந்த மக்கள் உள்ளே செல்ல முற்பட்ட போதும், தீ வீட்டின் உள்பரப்பில் அதிகமாக பற்றியதால் உள்ளே செல்ல முடியவில்லை.
பின்னர் தீயணைப்புபடையினருக்கு தகவல் தெரிவித்ததுடன், விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். தீயை அணைத்த பின் குழந்தையின் தாயார் குழந்தையை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அவரது வீட்டின் வளர்ப்பு நாயான Polo தன் உடல் முழுவதையும், அக்குழந்தையின் மீது போர்த்தியபடி இறந்து கிடந்தது. அதில் குழந்தைக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஆனால் நாயோ சம்பவ இடத்திலே பலத்த தீக்காயங்களுடன் பரிதாபமாக இறந்து கிடந்தது. இது பார்போரை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.
இது குறித்து Erika கூறியதாவது, தன்னுடைய முதல் குழந்தையை(நாய்) தான் இழந்து விட்டதாகவும், மற்றொரு குழந்தை(Viviana) உயிர் பிழைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும் வருத்ததுடன் கூறினார்.
தன் உயிரை கொடுத்து எட்டு மாத குழந்தையின் உயிரை காப்பாற்றிய நாய்.....
Reviewed by Author
on
August 20, 2016
Rating:

No comments:
Post a Comment