அண்மைய செய்திகள்

  
-

மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை


யாழ்.பல்கலைக்கழக மாணவர்களை போதைவஸ்துக்கு அடிமையாக்கி கல்வியினை சீர்குலைக்கும் முயற்சியில் கஞ்சாவிற்பனை செய்யும் குழு ஒன்று தொடர்பான தகவல் கசிந்துள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் விடுதியை அண்டிய பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மாணவர்களிற்கு கஞ்சாவிற்பனை செய்வதாகவும் அவர் பருத்தித்துறைப்பகுதியில் இருந்து கஞ்சா வினை எடுத்து வந்து விற்பனை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை அண்டிய பகுதியான கொக்குவில் பகுதியில் வைத்து கடந்த 18 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு நான்கு கிலோக்கிராம் கஞ்சாவினைக் கைப்பற்றிய மதுவரித்தி ணைக்களத்தினர் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் பல்கலைக்கழக மாணவர் விடுதிக்கு முன்பாக வசிப்பவர் எனத் தெரி விக்கப்படுகிறது.

இவர் மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பலருக்கு கஞ்சாவிற்கப்பட் டுள்ளது விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் கொக்குவில் பகுதிகளில் அண்மைக்காலமாக வாள் வெட்டுச் சம்பவங்கள், கோஷ்டி மோதல்கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், பிரஸ்தாப நபருக்கு அதனுடனும் தொடர்புகள் இருக்கலாம் என பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை Reviewed by NEWMANNAR on August 20, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.