மன்னார் மறைமாவட்டத்தில் மருதமடு திருத்தலத்தின் திவ்வியநற்கருணை ஆராதனை சிறப்பாக இடம்பெற்றது.....
மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத உற்சவம் நாவநாள் திருப்பலிகளுடன் இடம் பெற்று வரும் நிலையில் நாளை 15-08-2016 திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.
கடந்த 06 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாட்கள் திருவிழா திருப்பலிகள் தமிழ், சிங்கள மொழிகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இன்று 14-08-2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருப்பலியும்,வேஸ்பர் திவ்வியநற்கருணை ஆராதனை சிறப்பாக
இடம்பெற்றது.
நாளை திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு திருநாள் திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து ஒப்புக்கொடுக்கப்படவுள்ளனர்.

மன்னார் மறைமாவட்டத்தில் மருதமடு திருத்தலத்தின் திவ்வியநற்கருணை ஆராதனை சிறப்பாக இடம்பெற்றது.....
Reviewed by Author
on
August 14, 2016
Rating:

No comments:
Post a Comment