மீள்குடியேற்ற செயலணி;கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில்
வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனுடன் கலந்துரையாடியும் ஆலோசனைகளைப் பெற்றுமே செயற்பாடுகளை முன்னெடுக்கும் என சபையில் உறுதிபடத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை உப–குழுவாகக் காணப்படும் மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு முதல்வரை இணைத்துக் கொள்ள முடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், வடக்கு மீள்குடியேற்றச் செயலணியில் மூன்று
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனையும் இணைத் துக் கொள்ள வேண்டுமென
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தொடர்ச்சியாக வலியுறுத்தியமையால் அவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோருக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வடமாகாண மீள்குடியேற்றத்திற்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுகள் தலைமையிலான மீள்குடியேற்றச் செயலணியொன்றை நியமித்திருக்கின்றீர்கள். இந்த செயலணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனோ அல்லது வடக்கு மக்கள் அதிக ஆணை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் எவருமே உள்வாங்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன? வடமாகாண மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான செயலணியில் அம்மக்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாது எவ்வாறு அந்த செயலணி செயற்பாடுகளை முன்னெடுக்கும். உண்மையிலே வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை முதன்மையாக கொண்டிருக்குமானால் மத்திய அரசாங்கம் ஏன் அப்பிரதேச பிரதிநிதிகளை உள்வாங்காது செயலணியை அமைத்துள்ளது? இதனால் இதற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்றார்.
இச்சமயத்தில் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய அரசாங்கம் தனது பொறுப்புக்களை முன்னெடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் பிரகாரம் தான் வடமாகாணத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மக்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு திரும்பியிருக்கின்ற போதும் அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதனை துரிதப்படுத்தும் முகமாகவே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி மீள்கட்டமைப்பு மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்துவற்காக உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும். இதற்காக இச்செயலணிக்கு பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் ஒத்துழைப்புடனேயே இந்த செயலணி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். மாகாண சபையைப் பொறுத்தவரையில் மீள்குடியேற்றம் தொடர்பாக பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. அத்துடன் மேலும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. மாகாண சபையின் செயற்பாடுகளில் தலையீடு செய்யவோ அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தவே நாம் விரும்பவில்லை. மாகாண சபையில் முன்மொழிவுகளையும் உள்வாங்கி பரிசீலனை மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றச் செயலணி தயாராகவே உள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து சார்ள்ஸ் எம்.பி. மீண்டும் குறிப்பிடுகையில்
மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூவர் உள்ளடக்கிய வகையிலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டள்ளது. இதன் பின்னணியில் வேறு காரணங்கள் காணப்படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. இந்த செயலணியில் உண்மைத்தன்மை எவ்வாறு காணப்படும் என்ற ஐயப்பாடு எமக்குள்ளது. காரணம் இந்த செயலணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் தன்னை மஹிந்த ராஜபக் ஷவின் மகன் எனக் கூறியவரும் நீதிமன்றத்துக்கு கல்லெறிந்து நீதித்துறையை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்குள்ளனவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் மீது தற்போது நிதி மோசடி குற்றப்புலனாய்வுப் பிரிவில் வழக்கு உள்ளது? இத்தகைய ஒருவர் அங்கத்துவம் வகிக்கும் மீள்குடியேற்றச் செயலணியின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியம். நீங்கள் அவரை அரசியல் காரணங்களுக்காக உங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அத்தகையவர் ஒருவர் அங்கத்துவம் உள்ள மீள்குடியேற்ற செயலணி எவ்வாறு உண்மைத் தன்மையுடையதாகவிருக்கும் எனக் கேள்வியெழுப்பியதோடு இந்த செலணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மூன்று அமைச்சர்களுடன் நான்காவதாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இச்சமயத்தில் மீண்டும் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டே மூன்று அமைச்சர்கள் தலைமையில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வணிக அமைச்சின் செயலாளர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சின் பிரதிநிதி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சின் பிரதிநிதி, வடமாகான பிரதம செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த செயலணியினர் மாகாண முதலமைச்சருடனும் கலந்துரையாடுவார்கள். அமைச்சர்கள்
கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். மீள்குடியேற்றத்தில் விசேடமாக பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முரண்பாடுகளின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக, கூறுவதனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களில் எத்தனைபேர் புத்தளத்தில் வசிக்க விரும்புகின்றார்கள், எத்தனைபேர் மீளவும் சொந்த இடங்களுக்கு திரும்ப விரும்புவார்கள் என்பதை இனங்காண வேண்டியுள்ளது. இவ்வாறு பல விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன என்றார். இதன்போது மீண்டும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வடமாகாண முதலமைச்சரை இந்த செயலணியில் உள்வாங்காது விட்டால் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனக் கருத முடியாது. நல்லாட்சி எனக் கூறுகின்றீர்கள். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கத்திடம் பிரயோகித்த அதே அதிகார அழுத்தத்தையே பிரயோகித்து எம்மை நசுக்குவதற்கு முயற்சிக்கின்றீர்கள். இவ்வாறு செயற்பட்டால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும். மீண்டும் பிரிவினைகளே உருவாகும் என கூறினார். அதன்போது எழுந்த பிரதமர் ரணில், இந்த செயலணியானது அமைச்சரவை உபகுழுவாகும். இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே இருக்க முடியும். அவ்வாறிருக்கையில்தான் மூன்று அமைச்சர்கள் தலைமையில் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார் என்றார். இச்சமயத்தில் குறுக்கிட்ட சார்ள்ஸ் எம்.பி. அரசாங்க அதிகார அமைச்சர்கள் தீர்மானம் எடுக்கும் போது எவ்வாறு எதிர்க்க முடியும். தற்போது அரச அதிகாரிகள் அதிகாரத்தினால் அடக்கப்படுகின்றார்கள். ஆகவே தீர்மானம் எடுக்கும் அந்தஸ்தில் உள்ள மூன்று அமைச்சர்களுக்கு நிகராக வடக்கு முதல்வரை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சுவாமிநாதன் உங்களுக்குரிய (சார்ல்ஸ் எம்.பி.குரிய) விளக்கத்தை வழங்குவார் எனக் கூறி அமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுவாமிநாதன், நாம் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தே இந்த குழுவை நியமித்துள்ளோம். தயவுசெய்து தவறான புரிதல்களை சொல்லாதீர்கள். நாம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கமாட்டோம். நானும் தமிழன்தான். நீங்கள் அச்சப்படுவதில் அர்த்தமில்லை. வடக்கு முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீள்குடியேற்றம் குறித்து எந்த சமயத்திலும் கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். அவர்களின் ஒத்துழைப்புடனேயே நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார். அச்சமயத்தில் சார்ள்ஸ் எம்.பி. கடுமையான தொனியில் நீங்களும் கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை போலவே அடக்குமுறையை முன்னெடுக்கப்போகின்றீர்கள் என்றார். அவ்வாறே செயற்படுகின்றீர்கள். வடக்கு முதல்வர் இல்லாத மீள்குடியேற்றச் செயலணியை ஏற்க முடியாது என கூறி அமர்ந்தார்.
அச்சமயத்தில் அமைச்சர் சுவாமிநாதனும் இது அமைச்சரவை உபகுழுவொன்றாகும். அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்பவே நியமிக்கப்பட்டது என்பதை மட்டும் தான் என்னால் உங்களுக்கு கூறமுடியும் என கூறியிருந்தார்
இதேவேளை வடமாகாண மீள்குடியேற்ற செயலணி சர்ச்சை குறித்து இவ்வாறு வாதவிவாதம் இடம்பெற்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சபையில் இருந்தபோதிலும் எதுவித குறுக்கீடுகளும் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மல நாதன் கடும் விவாதத்தில் ஈடுபட்டார்.
வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனுடன் கலந்துரையாடியும் ஆலோசனைகளைப் பெற்றுமே செயற்பாடுகளை முன்னெடுக்கும் என சபையில் உறுதிபடத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை உப–குழுவாகக் காணப்படும் மீள்குடியேற்றச் செயலணியில் வடக்கு முதல்வரை இணைத்துக் கொள்ள முடியாதெனவும் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், வடக்கு மீள்குடியேற்றச் செயலணியில் மூன்று
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரனையும் இணைத் துக் கொள்ள வேண்டுமென
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தொடர்ச்சியாக வலியுறுத்தியமையால் அவருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோருக்கிடையில் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் வடமாகாண மீள்குடியேற்றத்திற்காக அமைச்சரவை அந்தஸ்துள்ள மூன்று அமைச்சுகள் தலைமையிலான மீள்குடியேற்றச் செயலணியொன்றை நியமித்திருக்கின்றீர்கள். இந்த செயலணியில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனோ அல்லது வடக்கு மக்கள் அதிக ஆணை வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகள் எவருமே உள்வாங்கப்படவில்லை. இதற்கு காரணம் என்ன? வடமாகாண மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான செயலணியில் அம்மக்களின் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாது எவ்வாறு அந்த செயலணி செயற்பாடுகளை முன்னெடுக்கும். உண்மையிலே வடக்கு மக்களின் மீள்குடியேற்றத்தை முதன்மையாக கொண்டிருக்குமானால் மத்திய அரசாங்கம் ஏன் அப்பிரதேச பிரதிநிதிகளை உள்வாங்காது செயலணியை அமைத்துள்ளது? இதனால் இதற்கு பின்னணியில் வேறு காரணம் இருக்கின்றது என்ற சந்தேகம் எமக்கும் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது என்றார்.
இச்சமயத்தில் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மத்திய அரசாங்கம் தனது பொறுப்புக்களை முன்னெடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அதன் பிரகாரம் தான் வடமாகாணத்தில் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவதற்காக அமைச்சர்களான சுவாமிநாதன், ரிஷாட் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாணத்தில் மக்கள் தமது சொந்த பிரதேசங்களுக்கு திரும்பியிருக்கின்ற போதும் அவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பான செயற்பாடுகள் முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதனை துரிதப்படுத்தும் முகமாகவே இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணி மீள்கட்டமைப்பு மீள் குடியேற்றம் தொடர்பாக ஆராய்ந்தறிந்து நடவடிக்கைகளை துரிதப்படுத்துவற்காக உரிய செயற்பாடுகளை முன்னெடுக்கும். இதற்காக இச்செயலணிக்கு பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் ஒத்துழைப்புடனேயே இந்த செயலணி தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும். மாகாண சபையைப் பொறுத்தவரையில் மீள்குடியேற்றம் தொடர்பாக பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது. அத்துடன் மேலும் பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. மாகாண சபையின் செயற்பாடுகளில் தலையீடு செய்யவோ அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தவே நாம் விரும்பவில்லை. மாகாண சபையில் முன்மொழிவுகளையும் உள்வாங்கி பரிசீலனை மேற்கொள்வதற்கு மீள்குடியேற்றச் செயலணி தயாராகவே உள்ளது என்றார்.
அதனைத் தொடர்ந்து சார்ள்ஸ் எம்.பி. மீண்டும் குறிப்பிடுகையில்
மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூவர் உள்ளடக்கிய வகையிலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டள்ளது. இதன் பின்னணியில் வேறு காரணங்கள் காணப்படுகின்றனவா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. இந்த செயலணியில் உண்மைத்தன்மை எவ்வாறு காணப்படும் என்ற ஐயப்பாடு எமக்குள்ளது. காரணம் இந்த செயலணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் தன்னை மஹிந்த ராஜபக் ஷவின் மகன் எனக் கூறியவரும் நீதிமன்றத்துக்கு கல்லெறிந்து நீதித்துறையை அச்சுறுத்திய குற்றச்சாட்டுக்குள்ளனவருமான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இவர் மீது தற்போது நிதி மோசடி குற்றப்புலனாய்வுப் பிரிவில் வழக்கு உள்ளது? இத்தகைய ஒருவர் அங்கத்துவம் வகிக்கும் மீள்குடியேற்றச் செயலணியின் மீது எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியம். நீங்கள் அவரை அரசியல் காரணங்களுக்காக உங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அத்தகையவர் ஒருவர் அங்கத்துவம் உள்ள மீள்குடியேற்ற செயலணி எவ்வாறு உண்மைத் தன்மையுடையதாகவிருக்கும் எனக் கேள்வியெழுப்பியதோடு இந்த செலணியில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் மூன்று அமைச்சர்களுடன் நான்காவதாக இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இச்சமயத்தில் மீண்டும் எழுந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டே மூன்று அமைச்சர்கள் தலைமையில் வடமாகாண மீள்குடியேற்றச் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியில் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வணிக அமைச்சின் செயலாளர் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் நிதி அமைச்சின் பிரதிநிதி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார திட்டமிடல் அமைச்சின் பிரதிநிதி, வடமாகான பிரதம செயலாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த செயலணியினர் மாகாண முதலமைச்சருடனும் கலந்துரையாடுவார்கள். அமைச்சர்கள்
கண்காணிப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள். மீள்குடியேற்றத்தில் விசேடமாக பல்வேறு விடயங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியுள்ளது. முரண்பாடுகளின்றி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக, கூறுவதனால் புத்தளத்தில் இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களில் எத்தனைபேர் புத்தளத்தில் வசிக்க விரும்புகின்றார்கள், எத்தனைபேர் மீளவும் சொந்த இடங்களுக்கு திரும்ப விரும்புவார்கள் என்பதை இனங்காண வேண்டியுள்ளது. இவ்வாறு பல விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன என்றார். இதன்போது மீண்டும் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. வடமாகாண முதலமைச்சரை இந்த செயலணியில் உள்வாங்காது விட்டால் நீதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனக் கருத முடியாது. நல்லாட்சி எனக் கூறுகின்றீர்கள். ஆனால் மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கத்திடம் பிரயோகித்த அதே அதிகார அழுத்தத்தையே பிரயோகித்து எம்மை நசுக்குவதற்கு முயற்சிக்கின்றீர்கள். இவ்வாறு செயற்பட்டால் எவ்வாறு நல்லிணக்கம் ஏற்படும். மீண்டும் பிரிவினைகளே உருவாகும் என கூறினார். அதன்போது எழுந்த பிரதமர் ரணில், இந்த செயலணியானது அமைச்சரவை உபகுழுவாகும். இதில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே இருக்க முடியும். அவ்வாறிருக்கையில்தான் மூன்று அமைச்சர்கள் தலைமையில் செயலணி உருவாக்கப்பட்டுள்ளது. வடமாகாண பிரதம செயலாளர் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றார் என்றார். இச்சமயத்தில் குறுக்கிட்ட சார்ள்ஸ் எம்.பி. அரசாங்க அதிகார அமைச்சர்கள் தீர்மானம் எடுக்கும் போது எவ்வாறு எதிர்க்க முடியும். தற்போது அரச அதிகாரிகள் அதிகாரத்தினால் அடக்கப்படுகின்றார்கள். ஆகவே தீர்மானம் எடுக்கும் அந்தஸ்தில் உள்ள மூன்று அமைச்சர்களுக்கு நிகராக வடக்கு முதல்வரை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதன்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சர் சுவாமிநாதன் உங்களுக்குரிய (சார்ல்ஸ் எம்.பி.குரிய) விளக்கத்தை வழங்குவார் எனக் கூறி அமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் சுவாமிநாதன், நாம் அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தே இந்த குழுவை நியமித்துள்ளோம். தயவுசெய்து தவறான புரிதல்களை சொல்லாதீர்கள். நாம் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கமாட்டோம். நானும் தமிழன்தான். நீங்கள் அச்சப்படுவதில் அர்த்தமில்லை. வடக்கு முதல்வர் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீள்குடியேற்றம் குறித்து எந்த சமயத்திலும் கலந்துரையாடுவதற்கு தயாராகவே உள்ளோம். அவர்களின் ஒத்துழைப்புடனேயே நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார். அச்சமயத்தில் சார்ள்ஸ் எம்.பி. கடுமையான தொனியில் நீங்களும் கடந்த மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தை போலவே அடக்குமுறையை முன்னெடுக்கப்போகின்றீர்கள் என்றார். அவ்வாறே செயற்படுகின்றீர்கள். வடக்கு முதல்வர் இல்லாத மீள்குடியேற்றச் செயலணியை ஏற்க முடியாது என கூறி அமர்ந்தார்.
அச்சமயத்தில் அமைச்சர் சுவாமிநாதனும் இது அமைச்சரவை உபகுழுவொன்றாகும். அமைச்சரவை தீர்மானத்திற்கு ஏற்பவே நியமிக்கப்பட்டது என்பதை மட்டும் தான் என்னால் உங்களுக்கு கூறமுடியும் என கூறியிருந்தார்
இதேவேளை வடமாகாண மீள்குடியேற்ற செயலணி சர்ச்சை குறித்து இவ்வாறு வாதவிவாதம் இடம்பெற்ற வேளையில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் சபையில் இருந்தபோதிலும் எதுவித குறுக்கீடுகளும் செய்யவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மீள்குடியேற்ற செயலணி;கூட்டமைப்பின் கோரிக்கையை நிராகரித்த ரணில்
Reviewed by NEWMANNAR
on
August 11, 2016
Rating:

No comments:
Post a Comment