போத்தல் கள்ளு விற்பனைக்கு ஏதிரான போராட்டம்……மகஜர் இணைப்பு-----26-09-2016
போத்தல் கள்ளு விற்பனைக்கு ஏதிரான போராட்டம் அடம்பன் நெடுங்கண்டல் சனசமூக நிலையமும் மாதர் அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியமும் இணைந்து நாளை 26-09-2016 திங்கள் காலையில் 10 மணிக்கு ஆர்ப்பட்டத்தில் ஈடுபடவுள்ளதோடு மகஐர் கையளிக்கவும் உள்ளனர்.
மன்னார் மாந்தை மேற்கு செயலகத்திற்கு உட்பட்ட மேற்கூறப்பட்ட அமைப்பினரால் முன்னெடுக்கப்படும் இவ் ஆர்ப்பாட்டமானது போதைபபொருள் மதுபாவனையினால் இப்பிரதேசத்தில் பல குடும்பங்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது குறிப்பாக இயற்கையான கள்ளினை விட போத்தல் கள்ளு பாவனை அதிகமாகவும் சட்டவிரோதமாகவும் இடம்பெறுவதால் அதை வாங்கிக்குடிக்கும் கூலித்தொழிலாளர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதோடு அவர்களினால் அவர்களின் குடும்பமம் நடுவீதியில் நிற்கும் நிலை இதனை முற்றாக நிற்பாட்டக்கோரியே இவர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.அத்தோடு மாண்புமிகு ஜனாதிபதிஅவர்களுக்கும் அவருடன் சேர்த்து 12அரசதிணைக்களத்தின் உயர் அதிகாரிகளுக்கும் மகஐர் அனுப்பிவைக்கப்படவுள்து……
எமது சமூதாயம் எல்லாவற்றிலும் எமனின் காலடியில் தான் கிடக்கின்றது இப்படியான ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் பேரணிகள் மூலம் தான் ஒவ்வொன்றையும் பெறவேண்டியுள்ளது….
எல்லாம் தலைவிதி…..அல்ல சிலரின சதி….;
போத்தல் கள்ளு விற்பனைக்கு ஏதிரான போராட்டம்……மகஜர் இணைப்பு-----26-09-2016
Reviewed by Author
on
September 26, 2016
Rating:

No comments:
Post a Comment