சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நானாட்டான் துய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா-Photos
மன்னார் நானாட்டான் துய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா திருப்பலி இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
நானாட்டன் பங்குத்தந்தை ஏ.அருள்ராஜ் அடிகளார் தலைமையில் அருட்தந்தை பெனோ அலெக்ஸ்சான்டர் சில்லா அடிகளார் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலியை தொடர்ந்து துய அடைக்கல அன்னையின் திருச்சொரூப பவனியும், அதனைத்தொடர்ந்து அன்னையின் ஆசிர் வழங்கப்பட்டது.
இதன் போது நூற்றுக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொண்டு துய அடைக்கல அன்னையின் ஆசிரை பெற்றுக்கொண்டனர்.
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் நானாட்டான் துய அடைக்கல அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா-Photos
Reviewed by NEWMANNAR
on
September 08, 2016
Rating:

No comments:
Post a Comment