மன்னார் முருங்கன் ஆத்திக்குழியில் இரண்டு இரவுகளைக் கொண்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடகத்தின் சிறப்பாக இடம் பெற்ற முதல் நாள் அரங்கேற்றம்.-Photos
மாதோட்ட புலவர் அமரர் கீத்தாம்பிள்ளை அவர்களினால் இயற்றப்பட்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடக அரங்கேற்றம் சுமார் 20 வருடங்களின் பின்னர் மீண்டும் நேற்று மன்னார் முருங்கன் ஆத்திக்குழி கிராமத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு இரவுகளைக்கொண்ட குறித்த வடமோடி நாடகத்தின் முதல் நாள் அரங்கேற்றம் நேற்று புதன் கிழமை இரவு ஆத்திக்குழி புலவர் கீத்தாம்பிள்ளை கலையரங்கில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
அளவக்கை பங்குத்தந்தை அருட்தந்தை சுரேந்திரன் றெவ்வல் தலைமையில் இடம் பெறவுள்ள குறித்த நாடக நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் அருட்கலாநிதி கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகை,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை , வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன்,மற்றும் கௌரவ விருந்தினர்களாக முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மார்க்கஸ்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன்,சார்ள்ஸ் நிர்மலநாதன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர்களான வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,சட்டத்தரணி எஸ்.பிறிமுஸ் சிறாய்வா,மன்னார் மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்ஸி டி மேல்,மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்ரியான் மற்றும் பிரதேசச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-குறித்த நாடகமானது 1798 ஆம் ஆண்டு எழுதப்பட்ட நிலையில் 1800 ஆம் ஆண்டு முதல் பல தடவைகள் அரங்கேற்றப்பட்டது.குறித்த நாடகமானது சுமார் 20 வருடங்களின் பின் மீண்டும் முருங்கன் ஆத்திக்குழி கிராமத்தில அரங்கேற்றப்பட்டுள்ளது.இரண்டாம் நாள் நிகழ்வு இன்று வியாழக்கிழமை இரவு இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் முருங்கன் ஆத்திக்குழியில் இரண்டு இரவுகளைக் கொண்ட 'என்றிக்கு எம்பரதோர்' வடமோடி நாடகத்தின் சிறப்பாக இடம் பெற்ற முதல் நாள் அரங்கேற்றம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment