கர்நாடாகாவில் இயல்புநிலை திரும்பியது!
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பெங்களூருவில் வன்முறை வெடித்தது.
இதனால் மாநில மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. கன்னட அமைப்பினர், விவசாயிகள் தீவிர போராட்டத்தில் குதித்தனர்.
இதையடுத்து ஊரடங்கு உத்தரவு பெங்களூரு மற்றும் மைசூருவில் போடப்பட்டது. சகஜ நிலைக்கு திரும்பியது. கடந்த இரண்டு நாட்களாக பெங்களூரு மாநகரம் போர்களமாக மாறிவிட்டது. முழுமையாக வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது, பெட்டி கடை முதல் பெரிய வணிக நிலையங்களும் மூடப்பட்டது. சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் இயங்கவில்லை. பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.
சில இடங்களில் பொது சொத்துக்களை நாசம் செய்தவர்கள் மீது துப்பாக்கி சூடு, கண்ணீர் புகைவீச்சி, தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர துணை ராணுவப்படை, மத்திய தொழிற்சாலை பாது்காப்பு படையினர் வரவழைக்கப்பட்டனர்.
மேலும் வன்முறையாளர்களால் தீயிட்டு எரிக்கப்பட்ட வாகனங்களை நேற்று காலை மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.இன்னும் இரண்டொரு நாளில் மாநகரம் முழுவதும் முழு அமைதி திரும்பும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் என்.எஸ்.மெகரிக் தெரிவித்தார்.
இதனிடையில் கடந்த 3 நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவை நேற்று மாலை 6 மணியுடன் விளக்கி கொள்வதாக மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் சட்டம்-ஒழுங்கை சீர்கெடுக்கும் முயற்சியால் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதனிடையில் காவிரி பிரச்னையை வலியுறத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ரயில் சேவை தடை செய்வதாக வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஆனால் ரயில்கள் இயக்கத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கர்நாடாகாவில் இயல்புநிலை திரும்பியது!
Reviewed by Author
on
September 15, 2016
Rating:

No comments:
Post a Comment