அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு.(படம்)

மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து 12 மில்லியன் ரூபாய் நிதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட விவசாய உள்ளீடுகள் மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு நேற்று புதன் கிழமை(21) மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் வைத்து வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.


மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு தெரிசெய்யப்பட்ட விவசாயிகளுக்கான உள்ளீடுகளை வழங்கி வைத்தார்.


இதன் போது வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்,விவசாய திணைக்கள அதிகாரிகள்,பிரதிப்பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டு பயணாளிகளுக்கு விவசவாய உள்ளீடுகளை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.



-மன்னார் நிருபர்-
(22-09-2016)













மன்னார் மாவட்ட விவசாயிகளுக்கு விவசாய உள்ளீடுகள் வழங்கி வைப்பு.(படம்) Reviewed by NEWMANNAR on September 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.