அண்மைய செய்திகள்

recent
-

எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறுவர் தின நிகழ்வு - 01.10.2016

பூண்டிமாதா முன்பள்ளி முகாமைத்துவ குழு ஏற்பாட்டில் உலக சிறுவர் தினமாகிய 01.10.2016 சனிக்கிழமை சிறுவர்தின

நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இச்சிறுவர் தின நிகழ்வின் தொடக்கமாக காலை 7.15 மணிக்கு பஸ் மூலமாக

முன்பள்ளியில் இருந்து புறப்பட்டு மன்னார் புகையிரத நிலையம் சென்றடைந்து. பின் காலை 8.08க்கு மன்னார் புகையிரத

நிலையத்திலிருந்து அனைத்து முன்பள்ளி சிறுவர்கள் பெற்றோர்கள் அழைத்து செல்லப்பட்டு மடு புகையிரத நிலையம்

சென்றடைந்து அங்கிருந்து மன்னார் மாவட்டத்தின் பாரம்பரிய வணக்கஸ்தலமாகிய மடு திருப்பதிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின் அங்கு ஆலய வணக்கத்தினை முடித்து அன்றைய நாள் முழுவதையும் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்து மீண்டும் மடு புகையிரத

நிலையம் வந்தடைந்து மாலை 5.00 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மன்னார் புகையிரத நிலையம் மாலை 6.00 மணிக்கு

வந்தடைந்தது அங்கிருந்து பஸ் மூலமாக முன்பள்ளி வந்தடைந்தனர்.

இறுதி நிகழ்வாக முகாமைத்துவ குழுவினால் சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கான சிறிய அன்பளிப்பும்

வழங்கப்பட்டது. பின்னர் பெற்றோர் சங்க குழு செயலாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது.

இச்சிறுவர் தின நிகழ்வானது வருடாவருடம் இடம்பெறுகின்ற சாதாரண நிகழ்வு போலல்லாது சிறுவர்களை மகிழ்விக்கும்

நோக்கிலும்ரூபவ் அவர்களுடைய சந்தோஷத்தை நோக்கமாகக் கொண்டும் புகையிரத்தில் அழைத்து சென்று ஒரு(01) நாள் முழுவதும்

சிறுவர்களுடன் பெற்றோர்ரூபவ் ஆசிரியர்ரூபவ் முகாமைத்துவ குழுவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஒரே குடும்பமாக

மனமகிழ்ச்சியுடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இம்முன்பள்ளி இயங்குவதற்கு வசதிகளற்ற நிலையிலும் இந்நிகழ்வினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.


முன்பள்ளி முகாமைத்துவ குழு






















எமில்நகர் பூண்டிமாதா முன்பள்ளி சிறுவர் தின நிகழ்வு - 01.10.2016 Reviewed by NEWMANNAR on October 03, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.