அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் தீவிரம் பெறும் இராணுவமயமாக்கல்! பலிக்கடவாகும் மாணவர்கள்! பேராசிரியர்கள் குழு எச்சரிக்கை...


வடக்கில் இராணுவ மயமாக்கல் தீவிரம் பெற்றுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர் குழுவொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

வடக்கில் இராணுவ அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கான சமிக்ஞையாகவே யாழ் பல்கலைக்கழக மாணவர்களை நடுவீதியில் வைத்து கொலை செய்ததன் ஊடாக காணமுடிகின்றதென பேராசிரியர் குழு குறிப்பிட்டுள்ளது.

விஜயராஜா சுலக்ஷன் மற்றும் நடராஜா கஜன் ஆகிய இரண்டு மாணவர்களும் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் இலக்காகி உயிரிழந்தமைக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக பேராசிரியர்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்து, வடக்கிலும், கிழக்கிலும் மேற்கொள்ளப்படுகின்ற இராணுவமயமாக்கலை விரைவில் இல்லாதொழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைத்து அரசாங்க இராணுவத்தினரும் ஜனநாயக அரசியல்மயமாக்கலின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.

நாட்டில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு உட்பட அனைத்து புலனாய்வு சேவைகளையும் கலைத்து விடுவதற்கு செயற்படுமாறு குறித்த பேராசிரியர் குழு, அறிக்கை ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

வடக்கில் தீவிரம் பெறும் இராணுவமயமாக்கல்! பலிக்கடவாகும் மாணவர்கள்! பேராசிரியர்கள் குழு எச்சரிக்கை... Reviewed by Author on October 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.