அண்மைய செய்திகள்

recent
-

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் பரிதாப மரணம்!


கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வெட்டுக் காயத்துக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் அதிகளவு இரத்தப்போக்குக் காரணமாக பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் யாழ்.செம்மணி வீதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.


இதில் நாவற்குழி கிழக்கு தச்சன்தோப்பினை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கதிர்காமம் சந்திரசேகரன் (வயது42) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

பிரஸ்தாப குடும்பஸ்தர் யாழ்.செம்மணி வீதிப்பகுதியில் வெட்டுக் காயத்துக்கு இலக்கான நிலையில் வீழ்ந்து கிடப்பதை அவதானித்த நபரொருவர் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அம்புலன்ஸ் உதவியுடன் அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக ஏற்றி வந்துள்ளனர்.
எனினும் வெட்டுக்காயங்களுக் குள்ளான நபர் இடைவழியிலேயே அதிகளவு இரத்தப் போக்கு காரணமாக உயிரிழக்க நேரிட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதபரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட குடும்பஸ்தர் பரிதாப மரணம்! Reviewed by NEWMANNAR on October 10, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.