அண்மைய செய்திகள்

recent
-

விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணியை அளவீடு செய்ய நடவடிக்கை


விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியின் மைதானக் காணியை அளவீடு செய்து பாடசாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானின் ஏற்பாட்டில் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தினருக்கும் விமானப்படை அதிகாரிக்கும் இடையிலான சந்திப்பொன்று வவுனியா விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போதே மேற்படி தீர்வு எட்டப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் வவுனியா இறம்பைக்குளம் பகுதியில் விமானப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணியில் சுமார் 4 ஏக்கர் காணி எதிர்வரும் சனிக்கிழமை விமானப்படையினரின் பிரசன்னத்துடன் அளவீடு செய்யப்படவுள்ளது.

அதன்படி அளவீடு செய்யப்படும் காணியை எல்லையிட்டு அதன் அளவீட்டு வரைபடத்தினை பிரதேச செயலாளரிடம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சசி
விமானப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள காணியை அளவீடு செய்ய நடவடிக்கை Reviewed by NEWMANNAR on December 25, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.