கச்சதீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா....
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கச்சதீவில் இலங்கை அரசாங்கத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இன்று விமர்சையாக இடம்பெற்றது.
யாழ்.மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழாவில் யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஐன், வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜய குணரட்ண ஆகியோர் அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
காலையில் விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப் பிரகாசம் தேவாலயத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
கடந்த மே மாதம் புதிய தேவாலயத்துக்கான அடிக்கல் உத்தியோகபூர்வமாக நாட்டப்பட்டதுடன் 7.5 மில்லியன் ரூபா செலவில் தேவாலய நிர்மாணம் இடம்பெற்றுள்ளது.இன்றைய திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான தமிழக பக்தர்களும், பெருந்திரளான யாழ்ப்பாணம் மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டனர்.புதிய தேவாலயத்தின் திறப்பு விழாவிற்கான சகல ஒழுங்குகளையும் கடற்படையினர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கச்சதீவில் புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா....
Reviewed by Author
on
December 24, 2016
Rating:

No comments:
Post a Comment