நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 80 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர்க்கொள்ளளவு தற்போது 48 சதவீதமாகக் காணப்படுவதாக நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்துவ பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், சிறுபோக விவசாய நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதால், தற்போதுள்ள நீரின் அளவு அதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்த நீர்த்தேக்கங்கள் மூலம் குடிநீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ளும் மக்களுக்கான குடிநீர்த் தேவையும் போதுமான அளவில் உள்ளதாக எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழை எதிர்பார்க்கப்படுவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் நீர்ப்பாசனப் பணிப்பாளரும் நீர் முகாமைத்து பொறியியலாளருமான எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை
Reviewed by Vijithan
on
July 13, 2026
Rating:
Reviewed by Vijithan
on
July 13, 2026
Rating:


No comments:
Post a Comment