அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள மீன்பிடியாளர்களின் கோரிக்கையை மறுத்த முல்லை அரச அதிபர்


முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தில் நன்னீர் மீன்பிடிப்பிற்காக தமிழ், முஸ்லிம் மக்களுடைய இரு நன்னீர் மீன்பிடி சங்கங்களே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பதிவு செய்யப்படாத சிங்கள மக்கள் அடாத்தாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட முடியாது என முல்லைத்தீவு மாவட் ட அரசாங்க அதிபர் திருமதி றுபவதி கேதீஸ்வரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நன்னீர் மீன்பிடியாளர்களுக்கான கலந்துரையாடலின் போதே மேற்படி விடயத்தை அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குளத்தில் பாரம்பரியமாக தமிழ், முஸ்லிம் நன்னீ ர் மீன்பிடியாளர்களே தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் மணலாறு பகுதியில் தமிழ் மக்களுடைய நிலங்களை ஆக்கிரமித்து குடியேறியிருக்கும் சிங்கள மீனவர்கள் அடாத்தாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக இந்த குளத்தில் 75 வீதமான மீனை அவர்கள் பிடித்துவரும் நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மேற்படி விடயம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது சிங்கள மீனவர்கள் மேற்படி தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடிப்பதற்கு தமக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த செய்வாய்க்கிழமை தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடிக்கும் நன்னீர் மீன்பிடியாளர்களுடனான சந்திப்பு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போது தமக்கும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குளத்தில் மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என சிங்கள நன்னீர் மீன்பிடியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் அதனை நிராகரித்த அரசாங்க அதிபர் பதிவு செய்யப்பட்ட நன்னீர் மீன்பிடி சங்கங்கள் இரண்டு உள்ள நிலையில் அதற்கு மேலதிகமாக அடாத்தாக மீன்பிடிக்க எவருக்கும் அனுமதி இல்லை என கூறியுள்ளார்.


சிங்கள மீன்பிடியாளர்களின் கோரிக்கையை மறுத்த முல்லை அரச அதிபர் Reviewed by Author on December 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.