அமைதி இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் தேவைப்படுகிறது - ஜனாதிபதி
நாட்டில் வாழும் சகல இனங்களும் சமாதானமாகவும், ஐக்கியமாகவும், சகோதரத்துவமாகவும் வாழும் நாட்டை கட்டியெழுப்ப நத்தார் பிறப்புடன் அனைவரும் கைகோர்த்து கொள்ளவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகத்திற்கு தற்போது அமைதியும், மகிழ்ச்சியுமே தேவைப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
கிறிஸ்தவர்களுக்காக ஜனாதிபதி மாளிகையில் நேற்று நடைபெற்ற விசேட நத்தார் தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
சகல மதங்களும் போதிக்கும் அமைதி, சகோதரத்துவம் மற்றும் பொறுமை என்பவற்றை கொண்ட சமூகத்தை உருவாக்க சகலரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
அமைதி இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும் தேவைப்படுகிறது - ஜனாதிபதி
Reviewed by Author
on
December 24, 2016
Rating:

No comments:
Post a Comment