அண்மைய செய்திகள்

recent
-

சிதம்பர தரிசனம் தமிழகத்துக்கு கப்பல் சேவை


மார்கழி மாதத்து திருவெம்பாவைக் காலத்தில் சிதம்பரத்தில் ஈழத் தவர்கள் தரிசிப்பை மேற்கொள்ளும் வகையில் காங்கேசன்துறையில் இருந்து தமிழகத்தின் காரைக்கால் பட்டினத்துக்கான கப்பல் சேவை இம்மாதம் 27-ம் திகதி ஆரம்பமாகி 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

மார்கழித் திருவெம்பாவைக் காலத்தில் ஈழத்து சைவத் தமிழ் மக்கள் சிதம்பரம் சென்று தரிசனம் செய்யும் பொருட்டு கப்பல் சேவையை ஏற்பாடு செய்து தருமாறு ஈழத்து சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவ்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கப்பலில் செல்வதாயின் உரிய விசா அனுமதிகள் பெறப்படவேண்டும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சிதம்பர தரிசனம் தமிழகத்துக்கு கப்பல் சேவை Reviewed by NEWMANNAR on December 16, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.