அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சில் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளராக களமிறங்குவது யார்?


பிரான்சில் ஏப்ரல் மாதம் 23ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் தற்போது ஜனாதிபதியாக உள்ள பிராங்கோய்ஸ் ஹோலண்டே மீண்டும் ஜனாதிபதியாக போட்டியிட விருப்பமில்லை என அறிவித்துவிட்டார்.

எனவே சோசலிசக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தெரிவு செய்யும் முதற்கட்ட தேர்வு நேற்று நடைபெற்றது.

பிரதமராக பதவி வகித்து வந்த மானுவல் வால்ஸ் வேட்பாளர் தேர்வில் குறிப்பிடும்படியானவர் என்றபோதிலும், வெற்றி பெற குறைவான வாய்ப்பே உள்ளதாக கருதப்படுகிறது.

வலதுசாரியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பிரான்சுவா ஃபில்லான், தீவிர வலதுசாரியான தேசிய முன்னணிக் கட்சியைச் சேர்ந்த மரீன் லெபென் ஆகியோருக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்று கருதப்படுகிறது.

எனினும் சோசலிசக் கட்சி சார்பில் இறுதி கட்ட தேர்வு வரும் 29ம் திகதி நடைபெறும், இதன்போதே யார் வேட்பாளர் என்பது முடிவாகும்.

பிரான்சில் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல்: வேட்பாளராக களமிறங்குவது யார்? Reviewed by Author on January 23, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.