அண்மைய செய்திகள்

recent
-

பாடசாலை செல்லாதிருந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-Photos

வவுனியாவில் பாடசாலை செல்லாதிருந்த மாணவர்கள் என அடையாளங்காணப்பட்ட 26 குடும்பங்களை சேர்ந்த சுமார் 58 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

வடக்கு மாகாண அமைச்சர் பா.சத்தியலிங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் அவரது இணைப்பு அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

“கிராமங்களின் கல்வித்தரத்தை வலுப்படுத்துவோம்” எனும் விஷேட திட்டத்தின் கீழ் அமைச்சரின் இணைப்பாளர் திரு.பாலச்சந்திரன் சிந்துஜனால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த செயற்திட்டம் அமைச்சரின் நிதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை, தொடர்ந்தும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்து.
s.sasi




பாடசாலை செல்லாதிருந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு-Photos Reviewed by NEWMANNAR on January 05, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.