அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் காணிக்கருகில் அமைக்கப்படவிருந்த பொலிஸ் நிலையம் அமைக்க மாற்றிடம்

மன்னார் மாவட்ட பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் காணிக்கருகில் அமைக்கப்படவிருந்த பொலிஸ் நிலையம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு அப்பொலிஸ் நிலையம் அமைக்க மாற்றிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியிலுள்ள மாவீரர் துயிலுமில்லம் துப்பரவு செய்யப்படத்தையடுத்து அப்பிரதேச மக்கள் இச்சம்பவம் குறித்து சாள்ஸ் எம்.பியிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து குறிப்பிட்ட பிரதேசத்துக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர், மடு பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸ் அதிகாரியுடன் கலந்துரையாடி மாவீரர் துயிலுமில்லத்தின் புனித தன்மையினை கருத்தில் கொண்டு அப்பிரதேச பொலிஸ் நிலயத்தினை அங்கிருந்து குறிப்பிட்ட தூரம் தள்ளி பொலிஸ் நிலையம் நிறுவுவதற்கு காணி வழங்கப்பட்டுள்ளது.



மன்னார் பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லம் காணிக்கருகில் அமைக்கப்படவிருந்த பொலிஸ் நிலையம் அமைக்க மாற்றிடம் Reviewed by NEWMANNAR on February 13, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.