அண்மைய செய்திகள்

recent
-

ஐந்தாவது நாளாகவும் தொடரும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம்


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி இன்று ஐந்தாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களின் காணி உறுதிப்பத்திர பதிவுகள் பிரதேச செயலகத்தினூடக மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் நீண்ட காலமாக குறித்த காணிகளில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் இருந்துள்ளது. எனவே இது அரச காணிகளாக இருக்கலாம் என படைத்தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் காலத்தில் குறித்த காணிகளில் இலங்கை அரச பதிவுகளுடன் பொன்னம்பலம் தனியார் மருத்துவமனை இயங்கியதே தவிர விடுதலைப் புலிகளின் முகாங்கள் அதற்குள் இருக்கவில்லை என வைத்திய காலநிதி சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக செயற்பாடுகளுக்கு வழிவிட்டு குறித்த பிதேச மக்கள் தமது போராட்டத்தினை ஐந்தாவது நாளாக தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐந்தாவது நாளாகவும் தொடரும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் Reviewed by Author on February 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.