110 மாணவர்கள் 9ஏ சித்தி யாழ். கல்வி வலயம் சாதனை....
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் கல்வி வலயம் மகத்தான சாதனை படைத்துள்ளது.
110 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் “ஏ” சித்தி பெற்றுள்ளனர். இதில் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் 52 மாணவர்கள் 9ஏ சித்தியும், 56 மாணவர்கள் 8 ஏ சித்தியும் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி 36 மாணவர்கள் 9ஏ உம் 33 மாணவர்கள் 8ஏ உம் பெற்றுள்ளனர்.
பருத்தித்துறையில் ஹாட்லிக் கல்லூரியில் 19 மாணவர்கள் 9ஏ சித்தி பெற்றதுடன் யாழ்ப்பாணம், சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் 12 மாணவர்கள் 9ஏ, சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் 10 மாணவர்கள் 9ஏ சித்தி யும், பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் கல்லூரி 9 மாணவர்கள் 9ஏ சித்தியும் பெற்றுள்ளனர்.
இதேவேளை கடந்த வருடம் யாழ்.வலயத்தில் 59 மாணவர்களே 9ஏ சித்தி பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
110 மாணவர்கள் 9ஏ சித்தி யாழ். கல்வி வலயம் சாதனை....
Reviewed by Author
on
March 30, 2017
Rating:

No comments:
Post a Comment