29 ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்
வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் 29 ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.
குறித்த போராட்டம் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் மற்றும் அவசரகாலச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதி மொழிக்கு அமைவாக கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமே இவ்வாறு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
29 ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
March 24, 2017
Rating:

No comments:
Post a Comment