கனடாவில் தலைகளை வெட்டும் மர்ம இடம்! பாதாள உலகத்தில் நரகத்திற்கான பாதையா?
இன்றைய நவீன உலகிலும் விடை கூற முடியாத அல்லது விடைகள் மறைக்கப்படும் பல விடயங்கள் இருக்கின்றன. ஆனால் மர்மங்களும் ஒரு வகையில் சுவாரசியம் மிக்கவை.
நாகானி எனப்படும் பள்ளத்தாக்கு கனடா மெக்கன்சீ மலைத்தொடரில் அமைந்துள்ளது. குறித்த பகுதியில் மலைக்கு கீழே பல சுரங்கப்பாதைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
அது மட்டுமல்லாது அடர்ந்த காட்டுப்பகுதியாக இருக்கும் குறித்த பகுதிக்கு செல்லும் மனிதர்கள் தலை துண்டிக்கப்பட்டு சடலங்கலாக மீட்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஆனாலும் மேலோட்டமான ஆராய்வுகளே இடம் பெற்றுள்ளன. முழுக்காட்டினையும் முழுமையாக ஆராய அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்தக்காட்டுப் பகுதியில் விலங்குகள் வாழ்ந்து வருகின்றன, என்றாலும் இங்கு நுழையும் மனிதர்களின் தலைகள் மட்டுமே துண்டிக்கப்படுகின்றன.
விலங்குகள் தாக்கி இவை நடந்திருக்கலாம் என்றால் அதற்கான சாத்தியப்பாடுகள் மிகமிகக் குறைவு எனவும் தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள்.
அதன் காரணமாக அங்கு பழங்குடியினர் வாழ்ந்து வருவதாக அல்லது ஒரு மர்ம கலாச்சாரத்தைக் கொண்டு வாழும் இனம் வாழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது கனடாவின் ரொரன்டோ பகுதியில் காணப்படும் நிலக்கீழ் பகுதி ஒன்றின் மேற்புறத்தில் அதி கூடிய காந்தப்புல விசை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் அந்த காந்தப்புலத்திற்கான விடை இன்று வரை கூறப்படவில்லை. மேலும் Gerrard and Church பகுதியில் அதிகளவான வாகன விபத்துக்கள் இடம் பெறுகின்றன.
அதற்கு காரணம் அப்பகுதியில் நிலத்திற்கு கீழே அதிக காந்தப் புல விசை காணப்படுவதாக இருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
இவ்வாறாக நிலக்கீழ் பகுதிகளின் மர்மங்கள் உலகம் முழுவதும் இன்றும் தொடர்கின்றன. அந்த வகையில் எகிப்து நாட்டில் Cairo பகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைகளை ஆராய அனுமதி கொடுக்கப்படுவதில்லை.
ஆனாலும் குறித்த சுரங்கப்பாதைகளில் வேற்றுக்கிரகவாசிகளின் வருகை காணப்படுவதாகவும் அதனாலேயே ஆய்வுகள் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிக்கோ Mictlan பகுதியில் மூடப்பட்ட ஒரு சுரங்கப்பாதை உள்ளது. நரகத்திற்கான பாதை எனப்படும் இந்த சுரங்கப்பாதையின் மர்மமும் கூட இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
பிரேசிலின் Joinville எனும் மலையடிவாரங்களில் பல சுரங்கப்பாதைகள் காணப்படுகின்றன. ஒரு சில காலத்தில் அங்கு இசைச்சப்தம் கேட்பதாகவும் கூறப்படுகின்றது ஆனாலும் முழுமையான ஆய்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று இமயமலைக்கு கீழேயும் நிலக்கீழ் நகரம் இருப்பதாகவும் இதற்கு இந்தியாவின் பல பகுதிகளில் சுரங்கப்பாதைகள் இருப்பதாக கூறப்படுகின்றது.
அவற்றில் ஒன்று எல்லோரா குகைக்கு அருகே பல மர்மமான துவாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சிற்பங்கள் நிலக்கீழ் நகரை கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆதாரங்கள் காரணமாக நிலக்கீழ் மர்ம கலாச்சாரம் இருப்பதாகவே ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பரிமாணத்தில் மாறுபட்ட ஒரு இனம் அற்கு வாழ்வதாக கூறப்படுகின்றது.
அப்படி என்றால் அவர்கள் யார்? பூமிக்கு கீழேயும் பூமியின் மேற்பரப்பில் இருப்பதை விடவும் 3 மடங்கு அதிக நீர் இருக்கலாம் என ஆய்வாளர் Steve Jacobsen என்பவர் ஆய்வுக்குழு அறிவியல் அறிக்கை விடுத்துள்ளது.
அப்படி ஒரு நிலக்கீழ் மர்ம நாகரீகம் வாழ்கின்றதா? ஆய்வுகள் மட்டும் ஏன் மறைமுகமாக வைக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு விடயத்தையும் அறிவியலாக பார்த்து.,
தர்க்க ரீதியிலும் ஆய்வு ரீதியாகவும் பதில் கூறும் நவீன உலகம் ஏன் இவற்றை இன்றும் மர்மமாக வைத்துள்ளது. இந்தக் கேள்விகளுக்கு கூடிய விரைவில் பதில்களைத் தேடலாம்.

கனடாவில் தலைகளை வெட்டும் மர்ம இடம்! பாதாள உலகத்தில் நரகத்திற்கான பாதையா?
Reviewed by Author
on
March 28, 2017
Rating:

No comments:
Post a Comment