முசலி பிரதேசத்தில் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி ஆகிய இரு கிராம மக்களின் நில மீட்புக்கான போராட்டம் தொடர்கின்றது. (படம்)
தமது சொந்த நிலத்தை மீட்பதற்காக முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி ஆகிய இரு கிராம மக்களும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை 15 ஆவது நாளாகவும் தொடர்வதோடு,
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முஸ்ஸீம் மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் தொடர்ச்சியாக முன் னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நல்லாட்சி அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த செயற்பாடுகளை கண்டித்து முசலி பிரதேசத்தில் தமிழ்,முஸ்ஸீம் மக்கள் தற்போது நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து வருகின்ற நில மீட்பு போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்தும் அரசியல் பிரமுகர்கள்,மதத்தலைவர்கள்,கிரா ம மக்கள் உற்பட பலர் நாளாந்தம் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் மக்களின் போராட்டம் 15 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.
-இதே வேளை முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் தொடர்ச்சியாக முன் னெடுத்து வருகின்ற நில மீட்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை கிழமை 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தலட மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதோடு,புதிய வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரி அந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார் மாவட்டம் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை 15 ஆவது நாளாகவும் தொடர்வதோடு,
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முஸ்ஸீம் மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் தொடர்ச்சியாக முன் னெடுத்து வருகின்ற போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
நல்லாட்சி அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த செயற்பாடுகளை கண்டித்து முசலி பிரதேசத்தில் தமிழ்,முஸ்ஸீம் மக்கள் தற்போது நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் முள்ளிக்குளம் மக்கள் முன்னெடுத்து வருகின்ற நில மீட்பு போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்பட்டு வருகின்றது.
தொடர்ந்தும் அரசியல் பிரமுகர்கள்,மதத்தலைவர்கள்,கிரா ம மக்கள் உற்பட பலர் நாளாந்தம் ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது கடற்படை முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை சொந்த கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்ச்சியாக இடம் பெற்று வருகின்ற நிலையில் மக்களின் போராட்டம் 15 ஆவது நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.
-இதே வேளை முசலிப் பிரதேச மக்களின் வாழ்விடங்களையும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் வழங்கும் நிலங்களையும் சுவீகரிப்புச் செய்யும் புதிய வர்த்தமானிப் பிரகடனத்தை உடனடியாக இரத்துச் செய்ய கோரி மறிச்சிக்கட்டி பள்ளிவாசலுக்கு முன்பாக முஸ்ஸீம் மக்கள் தொடர்ச்சியாக முன் னெடுத்து வருகின்ற நில மீட்புப் போராட்டம் இன்று வியாழக்கிழமை கிழமை 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
தமது பூர்வீகமான குடியிருப்பு நிலங்களையும் விவசாயக்காணிகளையும் மேய்ச்சல் தரைகளையும், மேட்டு நிலக்காணிகளையும் புதிய வர்த்தமானி அறிவித்தலட மூலம் அபகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த மக்கள் குற்றம் சுமத்தியுள்ளதோடு,புதிய வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக ஜனாதிபதி இரத்துச் செய்ய வேண்டும் எனவும் கோரி அந்த மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முசலி பிரதேசத்தில் முள்ளிக்குளம் மற்றும் மறிச்சிக்கட்டி ஆகிய இரு கிராம மக்களின் நில மீட்புக்கான போராட்டம் தொடர்கின்றது. (படம்)
Reviewed by NEWMANNAR
on
April 06, 2017
Rating:
Reviewed by NEWMANNAR
on
April 06, 2017
Rating:







No comments:
Post a Comment