இங்கிலாந்தில் ஈழத்துச் சிறுமியின் சாதனை! கின்னஸ் பட்டியலுக்கு பரிந்துரை...
இங்கிலாந்தில் இல்ஃபொர்ட், ரெட்பிரிட்ஜ் இல் உள்ள ஆராதனா நாட்டியப் பள்ளியில் நடனம் பயிலும் பிரகதா என்ற ஈழத்துச் சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு அண்மையில் லண்டன் பார்க்கிங் புறோட்வே அரங்கில் சுமார் மூன்று மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வுக்கு விருந்தினர்களாக, ரெட்பிரிட்ஜ் மேயர் பாம்ரா மற்றும், ஈஸ்ட் ஹாம் அவை துணைத்தலைவர் போல் சத்திய நேசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறுமியை வாழ்த்தியுள்ளனர்.
பிரகதாவின் இந்த சாதனை கின்னஸ் பட்டியலுக்கான பரிந்துரைக்கு செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரகதா என்ற சிறுமி ஆராதனா நாட்டியப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்ரீமதி சுஜந்தினி மகேஸ்வரனின் மாணவியாவார்.
பிரகதாவின் குரு சுஜந்தினி மகேஸ்வரன் மற்றும் பெற்றோர் என அனைவருமே ஈழத்தில் உரும்பிராயைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஈழத்துச் சிறுமியின் சாதனை! கின்னஸ் பட்டியலுக்கு பரிந்துரை...
Reviewed by Author
on
June 25, 2017
Rating:

No comments:
Post a Comment